பதிவு செய்த நாள்
06 ஜூலை2019
23:49
தமிழகத்தில் தொழில் துவங்க, ‘ஆன்லைன்’ வாயிலாக விண்ணப்பிக்கும், ஒற்றைச்சாளர முறை இணைய பக்கத்தில், விரைவில் தமிழும் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக, தொழில் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில், சிறிய நிறுவனங்கள் முதல், பெரிய நிறுவனங்கள் வரை, தொழில் துவங்க, ஒற்றைச்சாளர முறையில், இணையதளம் வழியாக அனுமதி பெறும், ‘தமிழ்நாடு வணிகம் எளிதாக்குதல்’ சட்டம், ஏப்ரலில் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இதன் வழியாக, புதிய தொழில் நிறுவனம் துவங்குதல், ஏற்கனவே உள்ள நிறுவனத்தை விரிவுபடுத்துதல் உட்பட, தொழில் சார்ந்த அனைத்து சேவைகளையும் பெற முடியும்.பெரு நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வசதியாக, இத்தளத்தில், ஆங்கிலம் பிரதானமாக இடம் பெற்றுள்ளது. விரைவில், தமிழ் மொழியும் இணைக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து, தொழில் துறை அதிகாரிகள் கூறியதாவது:ஒற்றைச்சாளர முறை, தொழில் துவங்குவதற்கு அனுமதி கேட்டு, விண்ணப்பிப் பதற்கான இணைய பக்கத்தில், பெரு நிறுவனங்கள் மட்டுமின்றி, சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களும் விண்ணப்பிக்க முடியும். தற்போது, இதில் அனைத்து தகவல்களும் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளன.
இது வெளிநாட்டு நிறுவனங்கள் தெரிந்து கொள்ள வசதியாக அமைக்கப்பட்டுள்ளது.தற்போது, தமிழ் மொழி இடம் பெறவும் நடவடிக்கை எடுக்க உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|