பதிவு செய்த நாள்
15 ஜூலை2019
10:59
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகவாரத்தின் முதல்நாளில் ஏற்ற - இறக்கமாக வர்த்தகமாகின. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(ஜூலை 15ம் தேதி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 164.84 புள்ளிகள் உயர்ந்து 38,901.07ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 46.95 புள்ளிகள் உயர்ந்து 11,599.45ஆகவும் வர்த்தகமாகின.
இன்போசிஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவன பங்குகள் ஏற்றம் கண்டதால் இன்றைய வர்த்தகம் உயர்வாக தொடங்கின. இருப்பினும் ஒரு மணிநேரத்தில் பங்குச்சந்தைகளில் தள்ளாட்டம் ஏற்பட்டது. காலை 11 மணியளவில் சென்செக்ஸ் 6.43 புள்ளிகள் உயர்ந்து 38,742.66ஆகவும், நிப்டி 11.95 புள்ளிகள் சரிந்து 11,540.55ஆகவும் வர்த்தகமாகின.
ரூபாயின் மதிப்பு உயர்வு
அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 16 காசுகள் உயர்ந்து ரூ.68.53ஆக வர்த்தகமானது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|