பதிவு செய்த நாள்
19 ஜூலை2019
05:05
ஜி.எஸ்.டி., சட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட, ‘இ – வே’ பில் முறையில், ஏழு கோடி பில்கள் பதிவுடன், தமிழகம், ஐந்தாம் இடத்தில் உள்ளதாக, வணிக வரி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜி.எஸ்.டி., சட்டத்தின் கீழ், மாநிலங்களுக்கிடையே, சரக்குகளை எடுத்துச் செல்ல, ‘ஆன்லைன்’ வாயிலாக அனுமதி பெறும், இ – வே பில், கடந்த ஆண்டு, ஏப்., 1ல் அமல்படுத்தப்பட்டது. மாநிலத்துக்கு உள்ளே, 1 லட்சம் ரூபாய்க்கு அதிக மதிப்பிலான சரக்குகளை எடுத்துச் செல்வதற்கான, இ – வே பில், கடந்த ஆண்டு ஜூனில் நடைமுறைப்படுத்தப்பட்டது. தற்போது, இ – வே பில் பெறும் முறையில், தமிழகம் ஐந்தாம் இடத்தில் உள்ளது.
இது குறித்து, வணிக வரி அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில், இதுவரை, ஏழு கோடி, இ – வே பில்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதும், 78 கோடி பில்கள் பதிவாகி உள்ளன. இதில், மஹாராஷ்டிரா மாநிலம், முதல் இடத்தில் உள்ளது. தொடர்ந்து, குஜராத், கர்நாடகா, ஹரியானா ஆகியவை உள்ளன. 78 கோடி பில்லில், மாநிலங்களுக்கு உள்ளே, 42 கோடி, இ – வே பில்கள் பெறப்பட்டுள்ளன.
தமிழகத்தில், நான்கு கோடி பில்கள் மாநிலங்களுக்குள்ளும், மூன்று கோடி பில்கள், மாநிலங்களுக்கிடையேயும் பதிவு செய்யப்பட்டுள்ளன. மாநிலங்களுக்கு உள்ளே பெறக் கூடிய, இ – வே பில்லில். தமிழகம், நான்காம் இடத்தில் உள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.
– நமது நிருபர் –
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|