‘இ – வே’ பில் பதிவில் தமிழகம் 5ம் இடம்‘இ – வே’ பில் பதிவில் தமிழகம் 5ம் இடம் ...  'பேங்க் ஆப் இங்கிலாந்து' கவர்னர் பதவிக்கு ரகுராம் ராஜன் விண்ணப்பித்தாரா? 'பேங்க் ஆப் இங்கிலாந்து' கவர்னர் பதவிக்கு ரகுராம் ராஜன் ... ...
‘முத்ரா’ திட்டத்தில் வாராக் கடன்; அனுபவமில்லாத கடனாளிகளால் ஏற்பட்ட நிலை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜூலை
2019
05:08

புது­டில்லி: ‘‘முத்ரா திட்­டத்­தின் கீழ் வழங்­கப்­பட்ட கடன்­களில், 2 சத­வீத கடன்­கள், வாராக் கட­னாக மாறி­யுள்­ளன,’’ என, நிதி மற்­றும் கார்ப்­ப­ரேட் விவ­கா­ரங்­கள் துறை இணை அமைச்­சர், அனு­ராக் சிங் தாகூர் தெரி­வித்­துள்­ளார்.

இது குறித்து, அவர் மேலும் கூறி­யுள்­ள­தா­வது: ‘பிர­தான் மந்­திரி முத்ரா யோஜனா’ திட்­டத்­தின் கீழ், வங்­கி­யி­லி­ருந்து வழங்­கப்­பட்ட கடன்­களில், 2 சத­வீ­தம் மட்­டுமே, வாராக் கட­னாக மாறி­யுள்­ளது. சில கார­ணங்­க­ளால், கட­னு­தவி பெற்­ற­வர்­கள், கடனை திருப்­பிச் செலுத்­தா­மல் விட்­டு­விட்­ட­னர். குறிப்­பாக, ‘சிசு’ பிரி­வில், முதல் முறை­யாக கடன் பெற்­ற­வர்­கள், அவ­சர தேவை­க­ளுக்கு முன்­னு­ரிமை தந்­த­தன் கார­ண­மாக, அவர்­க­ளால் கடனை அடைக்க முடி­யா­மல் போயுள்­ளது.

அதே­போல், வியா­பா­ரத்­தில் நஷ்­டம் ஏற்­பட்­டது, கடன் விவ­கா­ரங்­களில் போதிய அனு­ப­வங்­கள் இல்­லா­தது போன்ற கார­ணங்­க­ளா­லும், சிலர் கடனை அடைக்­க­வில்லை. இத­னால், இது­நாள் வரை வழங்­கப்­பட்ட கடன்­களில், 2 சத­வீ­தம் வாராக் கட­னாக மாறி­யுள்­ளது. இவ்­வாறு, அவர் கூறி­னார்.

பிர­த­மர் நரேந்­திர மோடி­யின் முதன்மை திட்­டங்­களில் ஒன்று, ‘பிர­தான் மந்­திரி முத்ரா யோஜனா’ திட்­டம். இத்­திட்­ட­மா­னது குறு, சிறு மற்­றும் நடுத்­தர தொழில் நிறு­வ­னங்­களின் வளர்ச்­சிக்­காக ஏற்­ப­டுத்­தப்­பட்­டது. இத்­திட்­டத்தை, பிர­த­மர் மோடி, 2015 ஏப்., 8ம் தேதி துவக்கி வைத்­தார். இத்­திட்­டத்­தின் மூலம், 10 லட்­சம் ரூபாய்க்கு குறை­வான கடன் தேவைப்­படும் நிறு­வ­னங்­க­ளுக்கு, கடன் வழங்­கப்­ப­டு­கிறது. கடந்த மூன்று ஆண்­டு­க­ளாக, இத்­திட்­டம் வெற்­றி­க­ர­மாக அதன் இலக்கை நிறை­வேற்றி வரு­கிறது. கடந்த நிதி­யாண்­டில், இதன் இலக்கு, 3 லட்­சம் கோடி ரூபாய் என, அர­சால் நிர்­ண­யிக்­கப் பட்­டது.

இந்­நி­லை­யில், கடந்த நிதி­யாண்­டில், இலக்கை தாண்டி, 3.21 லட்­சம் கோடி ரூபாய் அள­வுக்கு, கடன் வழங்­கப்­பட்­டுள்­ளது. இதற்கு முந்­தைய நிதி­யாண்­டான, 2017- – 18ல், நிர்­ண­யிக்­கப்­பட்ட இலக்கை விட, கடந்த நிதி­யாண்­டில், 23 சத­வீ­தம் அள­வுக்கு அதி­க­மாக கடன் வழங்­கப்­பட்­டுள்­ளது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. கடந்த நிதி­யாண்­டில், சரா­ச­ரி­யாக, வேலை நாள் ஒன்­றுக்கு, 970 கோடி ரூபாய் என்ற அள­வில் கடன் கொடுப்­ப­தற்கு, அனு­மதி வழங்­கப்­பட்­டு உள்­ளது.

முத்ரா திட்­டத்­தின் கீழ், 2018 மார்ச் மாத முடி­வில், வாராக்­க­ட­னாக, 7,277 கோடி ரூபாய் இருப்­ப­தாக பார்­லி­மென்­டில் அறி­விக்­கப்­பட்­டது. முத்ரா திட்­டத்­தின் கீழ், மூன்று வகை­களில், கடன் வழங்­கப்­ப­டு­கிறது. சிசு திட்­டத்­தில், 50 ஆயி­ரம் ரூபாய் வரை; கிஷோர் திட்­டத்­தில், 50 ஆயி­ரம் முதல், 5 லட்­சம் ரூபாய் வரை; தருண் திட்­டத்­தில், 5 லட்­சம் முதல், 10 லட்­சம் ரூபாய் வரை, கடன் வழங்­கப்­ப­டு­கிறது. வங்­கி­களின் மூலம் இக்­க­டன்­கள் வழங்­கப்­ப­டு­கின்றன.

முத்ரா வாராக் கடன் ரூபாய் கோடி­களில்மொத்த வாராக் கடன் 17,651.74எஸ்.பி.ஐ., 2,694.22ஜனா ஸ்மால் பேங்க் 2,193.43பஞ்­சாப் நேஷ­னல் பேங்க் 1,605.13பேங்க் ஆப் இந்­தியா 965.77கனரா பேங்க் 921.46

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)