பதிவு செய்த நாள்
22 ஜூலை2019
10:51
மும்பை: வர்த்தக வாரத்தின் முதல்நாளில் இந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளன. இந்தாண்டில் இரண்டாவது மிகப்பெரிய வீழ்ச்சி இதுவாகும்.
இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(ஜூலை 22) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 373.14 புள்ளிகள் சரிந்த வர்த்தகமாகின. தொடர்ந்து சரிந்த பங்குச்சந்தைகள் காலை 10.30 மணியளவில் சென்செக்ஸ் 560.45 புள்ளிகள் சரிந்து 38,337.01ஆகவும், நிப்டி 59.2 புள்ளிகள் சரிந்து 11,360.05ஆகவும் வர்த்தகமாகின.
உலகளவில் பங்குச்சந்தைகளில் காணப்பட்ட சரிவு, ரூபாயின் மதிப்பு, முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்து வருவது, அந்நிய முதலீடுகள் வெளியேற்றம் போன்ற பல்வேறு காரணங்களால் இன்றைய வர்த்தகம் சரிவுடன் இருப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
ரூபாயின் மதிப்பு சரிவு
பங்குச்சந்தைகள் போன்று ரூபாயின் மதிப்பும் சரிவுடன் காணப்படுகிறது. அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 26 காசுகள் சரிந்து ரூ.69.06ஆக வர்த்தகமானது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|