பதிவு செய்த நாள்
07 ஆக2019
11:41
சென்னை : தங்கம் விலை தொடர்ந்து புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இன்று(ஆக.,7) ஒரேநாளில் சவரன் ரூ.568 உயர்ந்து இருப்பதுடன், ரூ.28 ஆயிரத்தை தாண்டியது.
சென்னை, தங்கம் - வெள்ளி சந்தையில், காலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.3,544க்கும், சவரன் ரூ.28,352க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.37,010க்கும் விற்பனையாகிறது.
வெள்ளியின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை ரூ.1.10 காசுகள் உயர்ந்து ரூ.46,800க்கு விற்பனையாகிறது.
கடந்த ஆக.,1ல் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.3,310ஆக இருந்த நிலையில் இன்று ரூ.3,544ஆக உயர்ந்துள்ளது. ஒருவாரத்தில் மட்டும் ரூ.1,872 அதிகரித்துள்ளது.
சர்வதேச சந்தைகளில் பொருளாதார சூழல் ஸ்திரமற்ற தண்மையில் இருப்பதன் காரணமாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவதாக தங்கம் - வெள்ளி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|