பதிவு செய்த நாள்
22 ஆக2019
10:55
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் தொடர் சரிவில் உள்ளன. வர்த்தகவாரத்தின் நான்காம் நாளான இன்று(ஆக.,22) சரிவுடன் துவங்கி உள்ளன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 127.32 புள்ளிகளும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 44.80 புள்ளிகளும் சரிந்தன. காலை 10.45 மணியளவில் பங்குச்சந்தைகள் மேலும் சரிந்தன. சென்செக்ஸ் 239 புள்ளிகள் சரிந்து 36,821ஆகவும், நிப்டி 81 புள்ளிகள் சரிந்து 10,836.95ஆகவும் வர்த்தகமாகின.
உலகளவில் காணப்படும் பொருளாதார மந்தநிலை, ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்படும் சரிவு, ரூபாயின் மதிப்பு சரிவு போன்ற காரணங்களால் இன்றைய வர்த்தகம் சரிவுடன் இருப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
ரூபாயின் மதிப்பு சரிவு
பங்குச்சந்தைகள் போன்று ரூபாயின் மதிப்பும் சரிவுடன் காணப்படுகிறது. அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 17 காசுகள் சரிந்து ரூ.71.72ஆக வர்த்தகமானது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|