இரண்டாவது காலாண்டில் வளர்ச்சி குறையும்; ஜி.டி.பி., 5.7 சதவீதமாக சரியும் என, ‘நோமுரா’ கணிப்பு இரண்டாவது காலாண்டில் வளர்ச்சி குறையும்; ஜி.டி.பி., 5.7 சதவீதமாக சரியும் என, ... ...  ‘இ – வே’ பில் நிறுத்தம்: அவகாசம் நீட்டிப்பு ‘இ – வே’ பில் நிறுத்தம்: அவகாசம் நீட்டிப்பு ...
வெளிநாட்டு நிறுவனங்களை ஈர்க்க கட்டமைப்பை மேம்படுத்த வலியுறுத்தல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஆக
2019
23:28

சென்னை: ‘‘தமிழகத்தில் கட்டமைப்புகளை மேலும் மேம்படுத்தினால், நிறைய அமெரிக்க நிறுவனங்கள், தமிழகத்தில் முதலீடு செய்ய வாய்ப்பு உள்ளது,’’ என, இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்பு, தலைமை செயல் அதிகாரி, அஜய் சகாய் தெரிவித்தார்.


இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில், ‘தமிழகத்தில் இருந்து ஏற்றுமதி’ என்ற தலைப்பில், சென்னையில் கருத்தரங்கம் நடைபெற்றது.இதில், ஏற்றுமதி செய்வதற்கு உள்ள வாய்ப்புகள், சவால்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.


நிகழ்ச்சியில், அஜய் சகாய் பேசியதாவது:அமெரிக்கா – சீனா இடையேயான வர்த்தக போரின் காரணமாக, இந்தியாவில், அமெரிக்க நிறுவனங்கள் முதலீடு செய்ய நிறைய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் உள்ள கட்டமைப்புகளை மேலும் மேம்படுத்தினால், வாகன உற்பத்தி, மொபைல், எலக்ட்ரிக்கல் உட்பட, பல்வேறு நிறுவனங்களின் முதலீடுகளை நாம் ஈர்க்கலாம்.துறைமுகத்தில் பொருட்களை எடுத்து செல்வதில், பிரச்னைகள் உள்ளன. இவை போன்ற பிரச்னைகளை சரி செய்தால், ஏற்றுமதி அதிகரிக்கும். இவ்வாறு, அவர் பேசினார்.


இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்பின் தென்மண்டல தலைவர், இஸ்ரார் அகமது பேசியதாவது: இந்திய ஏற்றுமதியில், தமிழகத்தின் பங்கு, 9.5 சதவீதமாக உள்ளது. 3,000 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.இந்தியாவில் இருந்து, 32 ஆயிரத்து, 100 கோடி ரூபாய் மதிப்பிலான ஏற்றுமதி நடைபெறுகிறது. இதை, 35 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)