பதிவு செய்த நாள்
22 ஆக2019
23:32
புதுடில்லி: ஐ.ஆர்.சி.டி.சி., எனும், ‘இந்தியன் ரயில்வே கேட்டரிங் அண்டு டூரிஸ்ட் கார்ப்பரேஷன்’ நிறுவனம், பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, செபிக்கு விண்ணப்பம் செய்துள்ளது.
ஐ.ஆர்.சி.டி.சி., நிறுவனம், இந்த புதிய பங்கு வெளியீட்டின் மூலம், 500 முதல், 600 கோடி ரூபாய் வரை திரட்ட திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.மேலும், இந்த பங்கு வெளியீட்டின்போது, 10 ரூபாய் முகமதிப்பு கொண்ட இரண்டு கோடி பங்குகளை, மத்திய அரசு விற்பனை செய்ய இருக்கிறது. ‘ஐ.டி.பி.ஐ., கேப்பிட்டல் மார்க்கெட்ஸ் அண்டு செக்யூரிட்டீஸ், எஸ்.பி.ஐ., கேப்பிட்டல் மார்க்கெட்ஸ், யெஸ் செக்யூரிட்டீஸ்’ ஆகிய நிறுவனங்கள், பங்கு வெளியீட்டுக்கான பணிகளை நிர்வகிக்க இருக்கின்றன.
‘ஆல்பாலாஜிக் டெக்சிஸ்’மென்பொருள் ஆலோசனை நிறுவனமான, ‘ஆல்பாலாஜிக் டெக்சிஸ்’ நிறுவனம், இன்று பங்கு வெளியீட்டுக்கு வருகிறது. மும்பை பங்குச் சந்தையின், ‘ஸ்டார்ட் அப்’ தளத்தில் பட்டியலிடப்படும் முதல் நிறுவனம் இதுவாகும். புனேவைச் சேர்ந்த இந்நிறுவனம், பங்கு வெளியீட்டின் மூலமாக, 6.18 கோடி ரூபாய் நிதியை திரட்ட உள்ளது. ஒரு பங்கின் விலை, 84 ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதலீடு செய்வதற்கான குறைந்தபட்ச அளவு, 1,600 பங்குகள். அதாவது, குறைந்தபட்ச முதலீட்டு தொகை, 1 லட்சத்து, 34 ஆயிரத்து, 400 ரூபாய்.பங்கு வெளியீடு, 27ம் தேதியுடன் நிறைவடையும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|