சரிந்த ரூபாயின் மதிப்பு, பங்குச்சந்தைகள் உயர்ந்தனசரிந்த ரூபாயின் மதிப்பு, பங்குச்சந்தைகள் உயர்ந்தன ...  சிறு துளி சிறு துளி ...
ஜி.எஸ்.டி., மேலும் எளிமையாக்கப்படும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஆக
2019
03:00

புதுடில்லி: நாட்டின் பொருளாதார சிக்கல்களை மீட்டெடுக்கும் வகையில், நிதியமைச்சர், நிர்மலா சீதாராமன், பல்வேறு அறிவிப்புகளை நேற்று வெளியிட்டார்.
ஜி.எஸ்.டி., வரியை மேலும் எளிமையாக்குவது, வங்கி கடன்களுக்கான வட்டி குறைப்பு, அன்னிய முதலீட்டாளர்கள் வருமானத்தின் மீதான கூடுதல் வரியை திரும்ப பெறுதல் உள்ளிட்ட, பல முக்கியமான அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.நாட்டின் பொருளாதார நிலை குறித்து, கடந்த சில வாரங்களாக, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களை தொடர்ச்சியாக சந்தித்து வந்தார்.உயர்மட்ட அதிகாரிகளிடமிருந்து மட்டுமின்றி, வங்கி கிளை மேலாளர்கள் வரை, அனைத்து தரப்பினருடைய ஆலோசனைகளையும் பெற்றார்.
இதையடுத்து, அவர் பிரதமருடன், விரிவான மறு ஆய்வு கூட்டத்தையும் நடத்தினார்.இந்நிலையில், நேற்று அவர், பொருளாதார நிலையை சரி செய்வதற்கான பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.நிதியமைச்சர் வெளியிட்ட சில முக்கியமான அறிவிப்புகள்: எப்.பி.ஐ., எனும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வருமானத்தின் மீதான கூடுதல் வரி திரும்ப பெற்றுக் கொள்ளப்படுகிறது வீடு, வாகன கடன்களுக்கான வட்டி, இனி குறையும். வங்கிகளும், ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதத்துக்கு ஏற்ப, கடன்களுக்கான வட்டியை மாற்றி அமைப்பதை ஏற்றுக் கொண்டுள்ளன பொதுத் துறை வங்கிகள், வாடிக்கையாளர்கள் கடனை முழுமையாக கட்டி முடித்த, 15 நாட்களுக்குள்ளாக, ஆவணங்களை திருப்பிக் கொடுத்து விடும் மத்திய தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையில் பதிவு செய்துள்ள, ‘ஸ்டார்ட்- அப்’ நிறுவனங்களுக்கு, இனி, ‘ஏஞ்சல் டேக்ஸ்’ கிடையாது நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு பணி மீறல், இனி சிவில் குற்றமாக மட்டுமே கருதப்படும்; கிரிமினல் குற்றமாக கருதப்படாது வரி துன்புறுத்தல்களை முடிவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். பழைய வரி அறிவிப்புகள் குறித்து, அக்., 1ல் முடிவு செய்யப்படும் அனைத்து வருமான வரி நோட்டீஸ்கள் குறித்தும், மூன்று மாதங்களுக்குள் தீர்த்து வைக்கப்படும். பிரதமர் சொன்னது போல, செல்வத்தை உருவாக்கு பவர்களை அரசு மதிக்கிறது. அரசு தீர்வுகளை விரும்புகிறது; வழக்குகளை அல்ல ஜி.எஸ்.டி., மேலும் எளிமைப்படுத்தப்படும் நுகர்வில் ஏற்பட்டுள்ள மந்தநிலை, இந்தியா மற்றும் வளரும் நாடுகளுக்கு மட்டும் ஏற்பட்டதல்ல. தற்போதைய உலகளாவிய, மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 3.2 சதவீதமாக உள்ளது. இது, மேலும் குறையும் என, கணிக்கப்பட்டுள்ளது பல நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியாவில் வளர்ச்சி அதிகமாக உள்ளது சீன வர்த்தக போர் மற்றும் நாணய மதிப்பு சரிவு ஆகியவை, பொருளாதாரத்தில் நிலையற்ற தன்மைக்கு வழிவகுக்கிறது குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின், ஜி.எஸ்.டி., பாக்கி, 30 நாட்களுக்குள் வழங்கப் படும் பொதுத் துறை வங்கிகளுக்கு, 70 ஆயிரம் கோடி ரூபாய் மூலதனம் வழங்கப்படும். இதன் மூலம், பணப்புழக்கம் மேம்படுத்தப்படும் வாகனத் துறைக்கு உதவும் வகையில், அரசு அலுவலகங்கள் புதிய வாகனங்களை வாங்குவதற்கு இருந்த தடை நீக்கப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)