பதிவு செய்த நாள்
24 ஆக2019
03:02
ஏர் இந்தியா பாக்கிஏர் இந்தியா நிறுவனம் எரிபொருள் வகைக்கு, 4,500 கோடி ரூபாய் கடன் வைத்திருப்பதாகவும், 90 நாட்களில் தரவேண்டிய பணத்தை, 200 நாட்கள் ஆன பிறகும் தருவதில்லை எனவும், எண்ணெய் நிறுவனங்கள் குற்றம் சாட்டி உள்ளன.
எஸ்.பி.ஐ., வட்டி குறைப்புஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, அதன் நிரந்தர வைப்புத் தொகைக்கு வழங்கப்படும் வட்டியை, 0.5 சதவீதம் வரை குறைத்து அறிவித்துள்ளது. இதனால், இத்தகைய வைப்புத் தொகை மூலம் வாடிக்கையாளர்கள் பெறும், வருமானம் குறையும்.கைகோர்த்த கரூர் வைஸ்யாகரூர் வைஸ்யா வங்கியுடன் சேர்ந்து பேங்க் அஸ்யூரன்ஸ் பிரிவில் களம் இறங்கியுள்ளது டிஜிட் இன்ஷூரன்ஸ் நிறுவனம். இதன் மூலம் சிறு, நடுத்தர நிறுவனங்களின் காப்பீட்டு தேவையை பூர்த்தி செய்யும் வழக்கமான திட்டங்களிலிருந்து மாறுபட்டு, புதிய திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
திரும்ப பெறுகிறது மாருதிமாருதி சுசூகி நிறுவனம், 40 ஆயிரத்து, 618, ‘வேகன் ஆர்’ வாகனங்களை, அதன் எரிபொருள் பாகத்தில் ஏற்பட்டிருக்கும் பிரச்னையை சரிசெய்வதற்காக, திரும்ப பெற்றுக் கொள்கிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|