பதிவு செய்த நாள்
24 ஆக2019
03:09
சென்னை, ஆக. 24–போலியாக, ஜி.எஸ்.டி., பில் தயாரித்து மோசடி செய்தது தொடர்பாக, சென்னையில், கடந்த நான்கு மாதங்களில், 60க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஜி.எஸ்.டி., அமலுக்கு பின், போலி பில்கள் வாயிலாக, சலுகைகள் பெறுவது அதிகரித்து வருகிறது. போலி பில் தயாரிப்பதற்காக, ஜி.எஸ்.டி., பதிவு எண் பெற்று, போலி நிறுவனங்கள் துவங்கப்படுகின்றன.இவற்றை தடுக்கும் விதமாக, கடந்த நிதி ஆண்டில் மட்டும், ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்; 400 கோடி ரூபாய் வரி ஏய்ப்பும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த மூன்று மாதத்தில் மட்டும், 50க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.இது குறித்து, ஜி.எஸ்.டி., அதிகாரிகள் கூறியதாவது:ஏப்., முதல், ஜூலை வரையில், 60க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம், 80க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதிக தொகையை மோசடி செய்திருந்தால், அவர்கள் மீது கைது நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|