இரட்டை கவனிப்பு கோரும் கைக்குழந்தை! இரட்டை கவனிப்பு கோரும் கைக்குழந்தை! ... தங்கம் விலை புது உச்சம்: சவரன் ரூ.304 உயர்வு தங்கம் விலை புது உச்சம்: சவரன் ரூ.304 உயர்வு ...
பங்குச்சந்தைகளில் ஏற்றம்; ரூபாயின் மதிப்பு சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஆக
2019
11:00

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தக வாரத்தின் முதல்நாளில் ஏற்றமும், ரூபாயின் மதிப்பு சரிவும் கண்டன. உலக பொருளாதாரம் மந்தம் ஆட்டோ மொபைல் துறை வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்திய பொருளாதாரம் சரிவை சந்தித்துள்ளது. பல துறைகளில் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர்.

இதை சரி செய்யும் பொருட்டு ஜிஎஸ்டி வரி குறைப்பு உள்ளிட்ட பொருளாதார சீர்த்திருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளியன்று அறிவித்தார். இதன் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகள் இன்று(ஆக.,26) ஏற்றம் கண்டன.

வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 662.97 புள்ளிகள் உயர்ந்து 37,363.95ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 170.95 புள்ளிகள் உயர்ந்து 11,000ஆக வர்த்தகமானது. பின்னர் சரிவை சந்தித்த பங்குச்சந்தைகள் காலை 10.50 மணியளவில் சென்செக்ஸ் 75 புள்ளிகளும், நிப்டி 16 புள்ளிகளும் உயர்ந்து வர்த்தகமாகின.

ரூபாயின் மதிப்பு சரிவு

பங்குச்சந்தைகள் ஏற்றம் கண்ட நிலையில் ரூபாயின் மதிப்பு சரிவுடன் காணப்படுகிறது. இன்றைய வர்த்தகத்தில் அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 42 காசுகள் உயர்ந்து ரூ.72.08ஆக வர்த்தகமானது. வங்கிகள் மற்றும் இறக்குமதியாளர்களுக்கு டாலரின் தேவை அதிகரித்து இருப்பதாலும், அந்நிய முதலீடுகள் அதிகளவிலய வெளியேறிவதாலும் இன்றைய வர்த்தகம் சரிவுடன் இருப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)