பதிவு செய்த நாள்
26 ஆக2019
11:00
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தக வாரத்தின் முதல்நாளில் ஏற்றமும், ரூபாயின் மதிப்பு சரிவும் கண்டன. உலக பொருளாதாரம் மந்தம் ஆட்டோ மொபைல் துறை வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்திய பொருளாதாரம் சரிவை சந்தித்துள்ளது. பல துறைகளில் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர்.
இதை சரி செய்யும் பொருட்டு ஜிஎஸ்டி வரி குறைப்பு உள்ளிட்ட பொருளாதார சீர்த்திருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளியன்று அறிவித்தார். இதன் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகள் இன்று(ஆக.,26) ஏற்றம் கண்டன.
வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 662.97 புள்ளிகள் உயர்ந்து 37,363.95ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 170.95 புள்ளிகள் உயர்ந்து 11,000ஆக வர்த்தகமானது. பின்னர் சரிவை சந்தித்த பங்குச்சந்தைகள் காலை 10.50 மணியளவில் சென்செக்ஸ் 75 புள்ளிகளும், நிப்டி 16 புள்ளிகளும் உயர்ந்து வர்த்தகமாகின.
ரூபாயின் மதிப்பு சரிவு
பங்குச்சந்தைகள் ஏற்றம் கண்ட நிலையில் ரூபாயின் மதிப்பு சரிவுடன் காணப்படுகிறது. இன்றைய வர்த்தகத்தில் அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 42 காசுகள் உயர்ந்து ரூ.72.08ஆக வர்த்தகமானது. வங்கிகள் மற்றும் இறக்குமதியாளர்களுக்கு டாலரின் தேவை அதிகரித்து இருப்பதாலும், அந்நிய முதலீடுகள் அதிகளவிலய வெளியேறிவதாலும் இன்றைய வர்த்தகம் சரிவுடன் இருப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|