பதிவு செய்த நாள்
17 செப்2019
06:37
புதுடில்லி : வட்டி விகித குறைப்பு நடவடிக்கையால் மட்டுமே, பொருளாதார சரிவை தடுத்துவிட முடியாது என, எஸ்.பி.ஐ., அறிக்கை தெரிவித்துள்ளது.
இது குறித்து, இந்த ஆய்வறிக்கையில், மேலும் தெரிவித்துள்ளதாவது:நாட்டின் பொருளாதார சரிவை, தளர்வான நிதி கொள்கையால் மட்டும் தடுத்து நிறுத்தி விட முடியாது. முயற்சி - அதற்கு பதிலாக, தேவையை அதிகரிக்கும் வகையிலான நடவடிக்கைகளை, அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.குறிப்பாக, கிராமப்புறங்களில், தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டங்கள் மூலமாக, இதை உருவாக்க முயற்சிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
’ எஸ்.பி.ஐ., ரிசர்ச்’ பொருளாதார நிபுணர்கள் கூறியதாவது:அரசாங்க செலவினங்களை குறைப்பதற்கான எந்த ஒரு முயற்சியும், நிதி நிலை வளர்ச்சிக்கு, கடுமையாக தீங்கு விளைவிப்பதாகவே அமையும்.தற்போதைய மந்த நிலையை, நிதி கொள்கை முடிவுகளால் மட்டுமே சமாளிக்க முடியாது.வேலைவாய்ப்புதேவைகளில் ஏற்பட்டுள்ள தேக்கத்தை, கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதி திட்டங்கள் மூலம் அதிகரிக்க, அரசாங்கம் முயற்சிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|