சென்செக்ஸ் 642 புள்ளிகள் சரிவுடன் நிறைவுசென்செக்ஸ் 642 புள்ளிகள் சரிவுடன் நிறைவு ...  தத்தளிக்கும் அனில் அம்பானி திவாலாகும் இன்னொரு நிறுவனம் தத்தளிக்கும் அனில் அம்பானி திவாலாகும் இன்னொரு நிறுவனம் ...
வெளியேற நினைத்த சாம்சாங்: தக்க வைத்த யோகி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 செப்
2019
18:48

பிரயாக்ராஜ்: அடுத்த 6 ஆண்டுகளில் தங்களது மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி டிரில்லியன் டாலராக கொண்டு வருவதே இலக்கு என உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். மேலும் தங்களது மாநிலத்திலிருந்து வெளியேற நினைத்த சாம்சாங் நிறுவனத்தை, தனது முயற்சியால் தக்க வைக்கப்பட்டதாகவும் கூறினார்.

அவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது : நான் பதவியேற்ற 15 நாட்கள் இருக்கும். நொய்டாவில் ரூ.3000 கோடியில் முதலீடு செய்ய திட்டமிட்டிருந்த சாம்சங் நிறுவனம், அந்த திட்டத்தை கைவிட்டு வேறு மாநிலத்தில் முதலீடு செய்ய இருப்பதாக ஒரு தகவல் வந்தது. இதை கேட்டு எனக்கு அதிர்ச்சியானது. உடனடியாக சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மூத்த அதிகாரிகளை அழைத்து பேசினோம். அப்போது அவர்கள் பா.ஜ., அரசு பொறுப்பேற்றதால் இந்த முடிவை எடுக்கவில்லை, அதற்கு முன்னதாக இந்த முடிவை எடுத்துவிட்டோம். இங்கு பல இன்னல்களை சந்தித்தோம் என அவர்கள் கூறினார்கள். மேலும் பிற மாநிலங்களில் கிடைத்த சலுகைகள் மற்றும் உள் கட்டமைப்புகளால் இந்த முடிவை எடுத்ததாக தெரிவித்தனர்.

இதையடுத்து சாம்சங் நிறுவனத்தின் தலைவரை வரவழைத்து அவர்களின் பிரச்னைகளை கேட்டறிந்து 15 நாட்களில் சரி செய்வதாக உறுதி அளித்தோம். அதன்படி சாம்சாங் நிறுனவத்தை, எனது முயற்சியால் உ.பி., மாநிலத்தில் தக்க வைத்தோம். உ.பி.யில் ஏற்கனவே ரூ.5000 கோடி முதலீடு செய்த சாம்சாங் நிறுவனம், மேலும் ரூ.3000 கோடி முதலீடு செய்தது. இன்றைக்கு உலகளவில் சாம்சாங் நிறுவன அலைப்பேசிக்கான உற்பத்தி செய்யும் பெரிய தொழிற்சாலையாக நொய்டா அமைந்துள்ளது என்றார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)