பதிவு செய்த நாள்
18 செப்2019
06:29
புதுடில்லி : அமெரிக்காவைச் சேர்ந்த, ஆப்பிள் நிறுவனம், அதன் ஐபோன்களை, சென்னையில் தயாரிக்க, 7 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள், அதிகளவில் சீனாவில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே வர்த்தக மோதல் நீடித்து வருவதால், ஆப்பிள் நிறுவனம், இந்தியாவில் அதன் தயாரிப்பை மேற்கொள்ள விரும்புகிறது. இதையடுத்து, ஆப்பிளுக்காக அதன் பொருட்களை அதிகளவில் தயாரித்து வழங்கும், தைவானை சேர்ந்த, பாக்ஸ்கான் நிறுவனத்துடன் இணைந்து, 7 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளது.
பாக்ஸ்கான் நிறுவனத்துக்கு, ஏற்கனவே சென்னையில் தொழிற்சாலை இருப்பதால், இங்கிருந்து ஐபோன்களை தயாரித்து, உலகமெங்கும் சந்தைப்படுத்த, ஆப்பிள் முடிவு செய்துள்ளது.ஆப்பிள் நிறுவனம், ஏற்கனவே பெங்களூருவில், தைவானை சேர்ந்த, விஸ்ட்ரான் நிறுவனத்துடன் இணைந்து, குறிப்பிட்ட சில மாடல் போன்களை தயாரிக்க துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது, பாக்ஸ்கான் நிறுவனத்துடன் இணைந்து, தயாரிப்பை விரிவுபடுத்த உள்ளது. மேலும், ஆப்பிள் நிறுவனம், முதற்கட்டமாக, மும்பை, டெல்லி ஆகிய இடங்களில், அதன் ஸ்டோர்களை திறக்கவும் திட்டமிட்டுள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|