பதிவு செய்த நாள்
20 செப்2019
12:03
மும்பை : கார்பரேட் வரியை குறைப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்ததன் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகள் அதிரடியாக ஏற்றம் கண்டன.
பொருளாதார மந்தம்
பொருளாதார மந்த நிலையை சரி செய்ய மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக இரு வாரங்களுக்கு முன்னர் 10 பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்பட்டன. தொடர்ந்து ஜிஎஸ்டி., வரியை குறைக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கார்பரேட் வரி குறைப்பு
இந்நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கோவாவில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசும்போது, உள்நாட்டு நிறுவனங்களுக்கான கார்பரேட் வரி 25.17 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் உடன் செஸ் மற்றும் இதர வரிகளும் அடக்கம். எந்த ஊக்கத்தொகையும், சலுகைகளும் பெறாத உள்நாட்டு நிறுவனங்கள் 22 சதவீதம் கார்பரேட் வரி செலுத்தினால் போதும். அக்., 1க்கு பிறகு துவங்கப்படும் புதிய உள் நாட்டு நிறுவனங்களுக்கான கார்பரேட் வரி 17.01 சதவீதமும், எந்த சலுகையும் பெறாதாவர்களுக்கு 15 சதவீதமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு ஏப்.,1 முதலே இது அமலுக்கு வருகிறது. இந்த வரி குறைப்பு மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1.45 லட்சம் கோடி வருவாய் குறையும் என்றார்.
பங்குச்சந்தைகளில் அதிரடி ஏற்றம்
இந்திய பங்குச்சந்தைகள் காலையில் வர்த்தகம் துவங்கும் போது சென்செக்ஸ் 100 புள்ளிகளும், நிப்டி 23 புள்ளிகளும் உயர்வுடன் துவங்கின. நிதியமைச்சரின் அறிவிப்புக்கு பின்னர் அதிரடியாக ஏற்றம் கண்டன பங்குச்சந்தைகள். காலை 11.30 மணியளவில் சென்செக்ஸ் 1600 புள்ளிகளும், நிப்டி 450 புள்ளிகளும் ஏற்றம் கண்டன. தொடர்ந்து பகல் 1.45 மணியளவில் மேலும் உயர்ந்து சென்செக்ஸ் 2000 புள்ளிகளை கடந்தது. வர்த்தகம் முடியும்போது, சென்செக்ஸ் 1921.15 புள்ளிகள் உயர்ந்து 38, 014. 62 ஆகவும், நிப்டி 569.4 புள்ளிகள் உயர்ந்து 11,274.2 ஆக நிறைவடைந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|