பதிவு செய்த நாள்
21 செப்2019
02:37
புதுடில்லி: வீட்டுவசதி திட்டங்களுக்காக, 20 ஆயிரம் கோடி ரூபாய் நிதியம் ஒன்றை மத்திய அரசு ஏற்படுத்த இருப்பதாக, அண்மையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார்.
வாராக்கடன் உள்ளிட்ட சிக்கல்கள் எதுவுமில்லாத கட்டுமான நிறுவனங்களின், வீடு கட்டும் திட்டங்கள் முடிவுறாமல் இருந்தால், அதை முடிக்கும் வகையில், அந்நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்க, 20 ஆயிரம் கோடி ரூபாய் நிதியம் ஏற்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.இந்நிலையில், இந்த திட்டத்தை செயல்படுத்துவது குறித்து நிதியமைச்சகம், ரியல் எஸ்டேட் துறையினருடன் ஆலோசனை நடத்தியது.
அப்போது துறையினருடைய கருத்துகளை கேட்டுக்கொண்ட நிதியமைச்சகம், இன்னும், 45 நாட்களுக்குள்ளாக, 20 ஆயிரம் கோடி ரூபாய் நிதியத்தை ஏற்படுத்த, அரசு முனைப்பாக இருப்பதாக தெரிவித்துள்ளது.இந்த ஆலோசனைக் கூட்டத்தில், துறையை சேர்ந்தவர்கள், ஒருமுறை கடன் சீரமைப்பு, மற்றும் திவால் சட்டத்தில் சில மாற்றங்களை செய்தால், அரசால் உருவாக்கப்படும் நிதியம் அதிகபட்ச பயனை அளிப்பதாக அமையும் என தெரிவித்துள்ளனர்.
இந்த நிதியத்தில், 10 ஆயிரம் கோடி ரூபாய் அரசின் பங்களிப்பாகவும், மீதி, 10 ஆயிரம் கோடி ரூபாய், வெளி முதலீட்டாளர்களின் பங்களிப்பாகவும் இருக்கும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|