45 நாட்களுக்குள்ளாக ரூ.20,000 கோடி நிதியம் 45 நாட்களுக்குள்ளாக ரூ.20,000 கோடி நிதியம் ...  பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை முன்னணி நிறுவனங்கள் முயற்சி பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை முன்னணி நிறுவனங்கள் முயற்சி ...
முந்தைய வரி வழக்குகளுக்கு தீர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 செப்
2019
02:39

மத்திய கலால் மற்றும் சேவை வரி தொடர்பான வழக்குகளுக்கு, ஒரு முறை தீர்வு வழங்கும், ‘சப்கா விஷ்வாஸ்’ திட்டத்தின் கீழ், 50க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளதாக, ஜி.எஸ்.டி., அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜி.எஸ்.டி., சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன், மத்திய கலால் மற்றும் சேவை வரி சட்டம் அமலில் இருந்தது.இந்த வரி சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட பல்வேறு வழக்குகள், நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்களில், ஆயிரக்கணக்கில் நிலுவையில் உள்ளன.இந்த வழக்குகளுக்கு தீர்வு காண, மத்திய அரசு ‘சப்கா விஷ்வாஸ்’ என்ற புதிய திட்டத்தை அறிவித்தது. இந்த திட்டத்தில் பயன் பெற, ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
இதன் மீது விண்ணப்பங்கள் வர துவங்கி உள்ளன.இது குறித்து, ஜி.எஸ்.டி., அதிகாரிகள் கூறியதாவது:மத்திய கலால் மற்றும் சேவை வரி சட்டத்தின் கீழ், தமிழகத்தில், 8,000க்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. ‘சப்கா விஷ்வாஸ்’ திட்டத்தில், நிலுவை வழக்குகளின் அபராதம் மற்றும் வட்டி தொகைகளை தள்ளுபடி செய்வதாகும்.இந்த திட்டத்தில் தீர்வு காண்பதற்காக, சென்னையில், இதுவரை 50க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, செலுத்த வேண்டிய தொகை குறித்து, விண்ணப்பித்தவர்களுக்கு, 30 நாட்களுக்குள் தெரிவிக்கப்படும்.

அந்த தொகையை அவர்கள் செலுத்தியதும், அவர்களின் கணக்கு முடித்து வைக்கப்பட்டதற்கான சான்றிதழ் வழங்கப்படும். டிச., 31 வரை அவகாசம் இருப்பதால், விண்ணப்பங்கள் வருவது இனி அதிகரிக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
– நமது நிருபர் –

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)