பதிவு செய்த நாள்
21 செப்2019
02:39
மத்திய கலால் மற்றும் சேவை வரி தொடர்பான வழக்குகளுக்கு, ஒரு முறை தீர்வு வழங்கும், ‘சப்கா விஷ்வாஸ்’ திட்டத்தின் கீழ், 50க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளதாக, ஜி.எஸ்.டி., அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜி.எஸ்.டி., சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன், மத்திய கலால் மற்றும் சேவை வரி சட்டம் அமலில் இருந்தது.இந்த வரி சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட பல்வேறு வழக்குகள், நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்களில், ஆயிரக்கணக்கில் நிலுவையில் உள்ளன.இந்த வழக்குகளுக்கு தீர்வு காண, மத்திய அரசு ‘சப்கா விஷ்வாஸ்’ என்ற புதிய திட்டத்தை அறிவித்தது. இந்த திட்டத்தில் பயன் பெற, ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
இதன் மீது விண்ணப்பங்கள் வர துவங்கி உள்ளன.இது குறித்து, ஜி.எஸ்.டி., அதிகாரிகள் கூறியதாவது:மத்திய கலால் மற்றும் சேவை வரி சட்டத்தின் கீழ், தமிழகத்தில், 8,000க்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. ‘சப்கா விஷ்வாஸ்’ திட்டத்தில், நிலுவை வழக்குகளின் அபராதம் மற்றும் வட்டி தொகைகளை தள்ளுபடி செய்வதாகும்.இந்த திட்டத்தில் தீர்வு காண்பதற்காக, சென்னையில், இதுவரை 50க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, செலுத்த வேண்டிய தொகை குறித்து, விண்ணப்பித்தவர்களுக்கு, 30 நாட்களுக்குள் தெரிவிக்கப்படும்.
அந்த தொகையை அவர்கள் செலுத்தியதும், அவர்களின் கணக்கு முடித்து வைக்கப்பட்டதற்கான சான்றிதழ் வழங்கப்படும். டிச., 31 வரை அவகாசம் இருப்பதால், விண்ணப்பங்கள் வருவது இனி அதிகரிக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
– நமது நிருபர் –
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|