பதிவு செய்த நாள்
22 செப்2019
10:01
புதுடில்லி: நாட்டின் மொபைல் போன் தயாரிப்பு, கார்ப்பரேட் வரி குறைப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளால், 2025ம் ஆண்டில், 13.49 லட்சம் கோடி ரூபாயாக உயரும் என, இந்திய செல்லுலார் மின்னணுவியல் சங்கமான, ஐ.சி.இ.ஏ., தெரிவித்துள்ளது.
இது குறித்து, இந்த சங்கத்தின் தலைவரான, பங்கஜ் மொகிந்த்ரு கூறியதாவது:கடந்த நிதியாண்டில், நாட்டின் மொத்த மொபைல் போன்களின் தயாரிப்பு, 29 கோடியாக அதிகரித்துள்ளது; இதன் மதிப்பு, 1.81 லட்சம் கோடி ரூபாய்.அரசு பல்வேறு சலுகை அறிவிப்புகளை வழங்கி வரும் நிலையில், மொபைல் போன்களின் தயாரிப்பு மதிப்பு, 2025ம் ஆண்டில், 13.49 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும். இது, மொத்த ஏற்றுமதி இலக்கான, 7.81 லட்சம் கோடி ரூபாயையும் உள்ளடக்கியதாகும்.மொபைல் போன் ஏற்றுமதியாளர்கள், ஏற்கனவே, 7,100 கோடி ரூபாய் இலக்கை, நடப்பு நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களிலேயே எட்டிவிட்டனர்.
கடந்த, 2017 - -18ம் நிதியாண்டுடன் ஒப்பிடும்போது, கடந்த நிதியாண்டில், ஏற்றுமதி வளர்ச்சி, 800 சதவீதம் அதிகரித்து விட்டது. இது ஒரு வரலாற்று சாதனை.அரசின் அறிவிப்பால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நிறுவனங்களை அமைப்பதும், தயாரிப்பை துவங்குவதும் அதிகரிக்கும். அது, இத்துறையின் சந்தை மதிப்பை அதிகரிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|