தொழில் ஷியாம் சேகர் தொழில் ஷியாம் சேகர் ... லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகளை தவிக்க விட்ட தாமஸ் குக் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகளை தவிக்க விட்ட தாமஸ் குக் ...
தொழில் ஷியாம் சேகர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 செப்
2019
06:24

சற்றும் எதிர்பாராதவிதமாக, மத்திய அரசு, நிறுவன வரியை குறைத்திருப்பது வரவேற்கத்தக்க முடிவு.
பொருளாதாரத்தின் உடனடி தேவையான, முதலீடுகள் ஏற்பட இந்த முடிவு பெரிதும் உதவும்.அரசு, நம்முடைய பொருளாதாரத்தின் முதலீட்டு உருவாக்கத்தில் தன் பங்கை சற்றே குறைத்து, நிறுவனங்களுக்கும், தொழில் உலகிற்கும் அதிக பங்கு கொடுத்து ஊக்குவிக்கும் நடவடிக்கையாக தான் இந்த முடிவை பார்க்க வேண்டும்.
இது, அரசின் உயர் மட்ட சிந்தனையில் ஏற்பட்டிருக்கும் மிகப் பெரிய மாற்றம் என்றே சொல்ல வேண்டும். இன்னும் சொல்லப் போனால், இந்த மாற்றம், தொழில் உலகை ஆனந்த அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.ஒரே நாளில், அவநம்பிக்கைகளை களையும் அளவிற்கு, இது ஒரு மிகப் பெரிய முடிவு. தொழில் மற்றும் முதலீட்டு நம்பிக்கையை வளர்த்து பாதுகாக்க வேண்டிய தன் பொறுப்பை, அரசு சரியாகவே செய்துள்ளது
.இதனால் என்ன பயன்? யார் என்ன செய்ய வேண்டும்?நிறுவனங்கள் இனி முதலீடு செய்ய, அவர்கள் வசம் அதிக பணம் இருக்கும். விரிவாக்கம், புது தொழில் துவக்கம், உற்பத்தி திறன் பெருக்கம் என, எதிர்கால தேவைகளை நிறைவேற்ற தேவையான நிதியை அவர்கள் வசமே அரசு விட்டு வைக்கிறது.சீரான மேலாண்மையுடன் நடத்தப்படும் நிறுவனங்கள், உடனடியாக நிலுவையில் உள்ள வளர்ச்சி திட்டங்களை அமல்படுத்த இது நேரடியாக உதவும்.போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் முந்தி முதலீடுகள் செய்ய,
இது முக்கிய உந்துதல் வழங்கும். ஆகவே, இந்த முடிவு, போட்டி சூழலையும் மாற்றி அமைக்கும் என்பது உறுதி.நுகர்வு சார்ந்த நிறுவனங்கள், முதலீட்டு தேவை அதிகமில்லாத நிலையில், அவை அதிக டிவிடெண்டு கொடுக்கக்கூடும்.இது, முதலீட்டாளர்கள் கையில் அதிக பணத்தை சேர்த்து, அவர்களின் நுகர்வையும், முதலீட்டையும் அதிகரிக்கும். இதுவும் பொருளாதார வளர்ச்சிக்கு புதிய உயிரூட்டம் தரும் என்பதில் சந்தேகமில்லை.சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கு வாராக் கடன் சார்ந்த சலுகைகள் வழங்கப்பட்டிருப்பது, அவர்களும் மீண்டும் உயிர்த்து எழ ஒரு நல்ல உந்துதல் தரும்.வட்டி குறைப்பு, விரைவு கடன்கள், நிறுவன வரி குறைப்பு என தொடர்ச்சியான அதிரடி முடிவுகள் மூலம், அரசு ஒன்றை தெளிவுபடுத்துகிறது.
இனி, அதன் பொருளாதாரமுன்னேற்ற கொள்கைகள், ஒட்டுமொத்த பொருளாதாரம் சார்ந்து இருக்குமே தவிர, தனி துறை சார்ந்து மட்டும் அமையாது.தனித்துறை மற்றும் நிறுவன அளவில் எடுக்க வேண்டிய முடிவுகளையும், மாற்றங்களையும், அவர்களே எடுக்க விட்டுவிட்டு, அவற்றை நிறைவேற்ற தேவையான நிதி ஆதாரங்களை மட்டுமே அரசு ஏற்படுத்தி தரும்.சலுகை சார்ந்த எதிர்பார்ப்புகள் எப்படி இருக்க வேண்டும் என்ற பிம்பத்தை சரி செய்து விட்டு,
அடுத்த கட்டம் நோக்கி முதலீட்டாளர்கள், நிறுவனங்கள், அன்னிய முதலீட்டாளர்கள் மற்றும் பெரு நிறுவனங்கள் நகர வேண்டும் என்பதே, அரசின் முக்கிய வழிகாட்டி.இனி, அரசை குறை கூறும் போக்கு எடுபடாது. அனைவரும் தன் பங்கை ஆற்ற தயாராக வேண்டும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)