பதிவு செய்த நாள்
14 அக்2019
00:00
கச்சா எண்ணெய்
மூன்று வார தொடர் சரிவுக்குப் பின், கச்சா எண்ணெய் விலை, கடந்த வாரம், பேரலுக்கு, 3 டாலர் உயர்ந்து வர்த்தகம் நடைபெற்றது.
கடந்த வெள்ளியன்று, கச்சா எண்ணெய் ஏற்றி வந்த, ஈரான் நாட்டின் கப்பல், சிவப்புக் கடல் பகுதியில் ஏவுகணை தாக்குதலுக்கு ஆளானது. இதன் காரணமாக, வார இறுதி நாட்களில் விலை உயர்ந்து காணப்பட்டது.கடந்த, 15 மாதங்களாக நடைபெற்று வரும், அமெரிக்க – சீன வர்த்தக மோதலால், இரு நாடுகளும் பெருமளவிலான வர்த்தக வாய்ப்புகளை இழந்துள்ளன. இதனால், முதலீட்டு பொருட்களின் விலை கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது.
இச்சூழலில், இரு நாட்டு பிரதிநிதிகளின்பேச்சுகளால் ஏதேனும் சுமுக உடன்படிக்கை
ஏற்படலாம் என்ற கருத்து நிலவி வருகிறது. இதுவும், கச்சா எண்ணெய் விலை உயர
காரணமாக அமைந்தது.ஆசிய, அமெரிக்க, ஐரோப்பிய பங்குச் சந்தைகள் தொடர் வீழ்ச்சியில் வர்த்தகமாகி வருகின்றன. இதனால், பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருக்கும் என்ற
கண்ணோட்டம் ஏற்பட்டதால் அது, எண்ணெய் விலைக்கு பாதகமாக அமைந்தது.
அமெரிக்காவின், ‘ஷெல்’ கச்சா எண்ணெய் உற்பத்தி தொடர்ந்து அதிகரித்த வண்ணம்
உள்ளது. அங்கு இயங்கி வரும் ஆழ்குழாய் கிணறுகளின் எண்ணிக்கை, கடந்த மூன்று
ஆண்டுகளில் அதிகரித்து, தற்போது, 892 எண்ணெய் குழாய்கள் இயங்கி வருகின்றன.இதையடுத்து, தினசரி எண்ணெய் உற்பத்தி, 1 லட்சம்பேரல்கள் அதிகரித்து, மொத்த உற்பத்தி தினசரி, 1.14 கோடி பேரல்கள் என்ற அளவில் பெருகி வருகிறது.
அதிகரித்து வரும் உற்பத்தி, தேவை குறைவால் ஏற்பட்டுள்ள இருப்பு அதிகரிப்பு போன்ற
காரணங்களால், விலை ஏற்றம்கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, விலை சரிந்து வர்த்தகமாகி வருகிறது.உலக அளவில், தினசரி உற்பத்தியில், அமெரிக்கா, அதன் ஷெல் எண்ணெய்
உற்பத்தியுடன் சேர்த்து, முதலிடம் வகிக்கிறது. இரண்டாவதாக சவுதி அரேபியாவும்,
மூன்றாவதாக ரஷ்யாவும் உள்ளன.
அமெரிக்காவில் இயங்கி வரும் ஆழ்குழாய் கிணறுகளின் எண்ணிக்கை தொடர்ந்து
அதிகரித்த வண்ணம் உள்ளது. தற்போது, 892 குழாய்கள் செயல்பட்டு வருகின்றன. 2015, மார்ச் மாதத்துக்குப் பிறகு இதுவே அதிகமாகும்.உலக நுகர்வு தேவையில், 60 சதவீதத்தை, சவுதி அரேபியா, ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் மொத்த உற்பத்தி பூர்த்தி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
தங்கம் வெள்ளி
கடந்த வாரத்தின் இறுதி நாட்களான, வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில், 2
சதவீதத்துக்கு மேல், தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் சரிவு ஏற்பட்டது.சமீப காலமாக, அமெரிக்கா – சீனா இடையே நடைபெற்று வரும் வர்த்தக மோதல், தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றின் விலையில், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
வர்த்தக மோதல் போக்கால், பொருளாதார வளர்ச்சி குறைவு ஏற்படும் என்ற
கண்ணோட்டத்தில், முதலீட்டாளர்களின் பார்வை, தங்கத்தின் பக்கம் திரும்பியது. இதன்
காரணமாக, கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை அதிகரித்து வந்தது.தற்போது, இரு நாடுகளுக்கும் இடையே நடைபெறும் பேச்சால், சுமுக உடன்பாடு ஏற்படும் எதிர்பார்ப்பில், தங்கத்தின் விலை சரிந்து வர்த்தகமாகியது. மேலும், வியாபாரிகளின் லாபமீட்டும்
நோக்கத்தால் செய்த விற்பனை காரணமாகவும், தங்கம் மற்றும் வெள்ளி விலை, கடந்த வாரம் சரிந்து வர்த்தகமாகியது.
தங்கம் எப்போதும் முதலீட்டு பொருளாகவே கருதப்படுகிறது. உலக அளவில், சொல்லப்படாத நாணயமாக தங்கம் விளங்குகிறது.இச்சூழலில், அமெரிக்காவின் வட்டி விகிதம்
குறையும் என்ற எதிர்பார்ப்பிலும், பொருளாதாரத்தின்மந்தநிலை காரணமாகவும், அந்நாட்டின் அரசுகருவூலங்களின் ஆதாயம், 1.75 சதவீதமாக குறைந்தது. இதனால், முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை தங்கத்தின் மீது திருப்பினர்.மேற்கூறிய காரணங்களால், கடந்த சில காலமாக, தங்கம் விலை உயர்ந்து வருகிறது. குறிப்பாக, கடந்த நான்கு மாதங்களாக, விலை உயர்ந்து வருகிறது.
ஜி.எப்.எம்.எஸ்., நிறுவனம் நடத்திய, உலக தங்க உற்பத்தி கருத்துக் கணிப்பு நிலவரத்தில், சீனா தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது. சீனாவின் மொத்த உற்பத்தி, 426 டன்.
இரண்டாவதாக ஆஸ்திரேலியா, 275 டன் உற்பத்தி செய்கிறது. மூன்றாவதாக ரஷ்யாவின் உற்பத்தி, 270 டன். உலக நாடுகளின் மொத்த உற்பத்தியானது, 2017ல், 3,247 டன் ஆக இருந்தது. இது, 2016ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 5 டன் குறைவாகும்.
டாலருக்கு நிகரான, இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வர்த்தமாகி வரும் சூழலில், உள்நாட்டு ஆபரண சந்தையில் தங்கம் விலை, கடந்த சில வாரங்களாக உயர்ந்து காணப்பட்டது.செப்டம்பர் மாதத்தில், இந்தியாவின் மொத்த தங்கம் இறக்குமதி, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, 14 சதவீதம் சரிந்துள்ளது. இதற்கு ரூபாயின் மதிப்பு இழப்பு முக்கிய
காரணமாகும். சராசரியாக ஓராண்டில், 800 முதல், -900 டன் தங்கம் இறக்குமதி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
செம்பு
செம்பு விலை, கடந்த வாரம் அதிகரித்து வர்த்தகம் ஆனது. அமெரிக்க – சீன நாடுகளுக்கு இடையே நிலவி வரும் வர்த்தக மோதல், முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இம்மாத இறுதியில், சீன அதிகாரிகள், அமெரிக்க பயணம் மேற்கொண்டு பேச்சு நடத்த
உள்ளனர். இதில் ஏற்படும் சுமுக முடிவுகள், இரு நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை
ஊக்குவிக்கும் என கருதப்படுகிறது.
இதன் காரணமாக, தொழிற்சாலை தேவை கூடும் என்ற எதிர்பார்ப்பில் செம்பு விலை உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. எல்.எம்.இ., பொருள் வாணிப சந்தையில், செம்பு இருப்பு விபரம்
கடுமையாக குறைந்ததும் சந்தைக்கு சாதகமாக அமைந்தது.உலக அளவில், செம்பு நுகர்வில், சீனா முதலிடம் வகிக்கிறது. சீனாவின் தேவை மற்றும் இறக்குமதி, செம்பின் விலையில் மாற்றங்களை ஏற்படுத்தும். கடந்த சில மாதங்களாக, இந்நாட்டின் நுகர்வு தேவை
குறைந்ததன் காரணமாக, செம்பு விலை கடுமையாக சரிந்துள்ளது.வரும் நாட்களில்
இத்தகைய போக்கு கட்டுக்குள் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|