பதிவு செய்த நாள்
14 அக்2019
00:02
தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண், ‘நிப்டி’ கடந்த வாரம் அதிகப்படியான ஏற்றத்தாழ்வுடன் காணப்பட்டது. வார நாட்களில் சரிந்து வர்த்தகம் ஆனபோதிலும், வார இறுதியில், சற்று உயர்ந்து வர்த்தகம் ஆனது. வார முடிவில், 300 புள்ளிகள் அதிகரித்து, வர்த்தகம் முடிவுற்றது.
கடந்த வாரத்தில், குறிப்பிடத்தக்க விலையேற்றம் காணப்பட்ட பங்குகளில், ‘பார்தி ஏர்டெல், பிரிட்டானியா, பார்தி இன்ப்ரா டெல் மற்றும் சிப்லா’ போன்ற பங்குகள், அதிகப்படியான உயர்வை கண்டன.மாறாக, ‘யெஸ் பேங்க், கெய்ல், பி.பி.சி.எல்., – ஐ.டி.சி., – ஐ.ஓ.சி., மற்றும் டாடா கன்சல்டன்சி சர்வீஸ்’ போன்ற பங்குகள், அதிகப்படியான சரிவை சந்தித்தன.
துறை சார்ந்த குறியீட்டு எண்களை பொருத்தவரை, எப்.எம்.சி.ஜி., வாகனத் துறை மற்றும் வங்கித் துறை குறியீட்டு எண்கள் தலா, 3 சதவீதத்துக்கு மேல் உயர்ந்தது. ஊடகத் துறை, தொழில் நுட்பத் துறை, ரியல் எஸ்டேட் துறைகளின் குறியீட்டு எண்கள், சரிவை கண்டன.
பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள, பல முக்கிய முன்னணி நிறுவனங்களின்,
இரண்டாம் காலாண்டுக்கான நிதி அறிக்கைகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இதன்
அடிப்படையில், நிறுவனங்களின் ஆதாயத்தில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக, சந்தையில் மாற்றங்கள் நிகழும்.
தனியார் பொருளாதார கருத்துக் கணிப்பு நிறுவனமான, ‘மூடிஸ்’ கடந்த வியாழனன்று வெளியிட்ட அறிக்கையில், நடப்பு நிதியாண்டில், இந்திய பொருளாதார வளர்ச்சி, முந்தைய கருத்துக் கணிப்பில் இருந்து, 6.2 சதவீதத்திலிருந்து, 5.8 சதவீதமாக குறையும் என்று
அறிவித்துள்ளது.
மேலும், கடந்த மாதத்தில், ஆசிய மேம்பாட்டு வங்கி மற்றும் பொருளாதார செயல்பாட்டு வளர்ச்சி அமைப்பு போன்ற அமைப்புகளும், இந்திய பொருளாதார வளர்ச்சியில், 50 அடிப்படை புள்ளிகள் அளவுக்கு வளர்ச்சி குறைவு இருக்கும் என்று அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், கடந்த வாரம் நடைபெற்ற, ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை கூட்டத்தில், வட்டி விகிதம் குறைக்கப்பட்டதுடன், பொருளாதார வளர்ச்சி எதிர்பார்ப்பும் குறைக்கப்பட்டு
இருந்தது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறாக, பல முன்னணி நிறுவனங்களின் கருத்துக் கணிப்புகளும், பொருளாதார மந்த நிலையை சுட்டிக்காட்டும் விதமாகவே உள்ளன.பொருளாதார மந்த நிலையை சரிப்படுத்தும் விதமாக, கடந்த மாத இறுதியில், மத்திய நிதியமைச்சர், அனைத்து துறை
நிறுவனங்களுக்கும் வரி குறைப்பு அறிவிப்பை வெளியிட்டார். பங்குச் சந்தைகளை
பொருத்தவரை, நிறுவனங்களின் ஆதாய எதிர்பார்ப்பு மற்றும் வளர்ச்சியின் அடிப்படையில், பங்குகளில் ஏற்ற இறக்கங்கள் அமைவது இயல்பாகும். இதன் அடிப்படையில் பங்குகளில் மாற்றங்கள் நிகழும்.
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, கடந்த சில மாதங்களாக தொடர் சரிவில் இருந்து வருவது, நாட்டின் இறக்குமதி சுமையை அதிகரிக்கும் என்பதும், இதனால் நடப்பு கணக்கு பற்றாக்குறை கூடும் என்பதும், பொருளாதார வளர்ச்சி குறைவதற்கு ஒரு காரணமாக அமையும்.இந்த வாரத்தைப் பொருத்தவரை, நிப்டியின் ரெசிஸ்டென்ஸ் 11,390. இதைக் கடக்கும் நிலையில், மேலும் உயர்ந்து, வர்த்தகமாக வாய்ப்புள்ளது. அடுத்த ரெசிஸ்டென்ஸ் 11,445 மற்றும் 11,510; சப்போர்ட் 11,235 மற்றும் 11,150.
முருகேஷ் குமார்
murukesh.kumar@choiceindia.com
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|