ஐ.ஆர்.சி.டி.சி., பங்கு விலை முதல் நாளிலேயே சாதனை ஐ.ஆர்.சி.டி.சி., பங்கு விலை முதல் நாளிலேயே சாதனை ...  மொத்த விலை பணவீக்கம் 3 ஆண்டுகளில் இல்லாத குறைவு மொத்த விலை பணவீக்கம் 3 ஆண்டுகளில் இல்லாத குறைவு ...
மின் வாகன நிறுவனத்தில் ரத்தன் டாடா முதலீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 அக்
2019
00:43

புதுடில்லி:மின்சார வாகன, ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனமான, ‘டார்க் மோட்டார்ஸ்’ நிறுவனத்தில், ரத்தன் டாடா முதலீடு செய்ய உள்ளார். இருப்பினும், அவர் எவ்வளவு தொகையை முதலீடு செய்ய இருக்கிறார் என்பது இன்னும் தெரியவில்லை.
டார்க் மோட்டார்ஸ் நிறுவனத்தில், ரத்தன் டாடா முதலீடு செய்ய இருக்கும் நிலையில், ஏற்கனவே இந்நிறுவனம், ‘பாரத் போர்ஜ்’ நிறுவனத்திடமிருந்தும், ‘ஓலா கேப்ஸ்’ நிறுவனத்தின் நிறுவனரான பவிஷ் அகர்வாலிடமிருந்தும் நிதியை திரட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.இது குறித்து, ‘டாடா சன்ஸ்’ நிறுவனத்தின் ஓய்வுபெற்ற தலைவரான, ரத்தன் டாடா தன் அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:கடந்த சில ஆண்டுகளில், மின்சார வாகனங்கள் குறித்த அணுகுமுறையில் கடலளவு மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த தொழில் வெகு வேகமாக மாறி வருகிறது. இதையடுத்து, டார்க் மோட்டார்ஸ் நிறுவனத்தின் அணுகுமுறை காரணமாக, அதில் குறிப்பிட்ட அளவு முதலீடு செய்ய இருக்கிறேன்.இவ்வாறு ரத்தன் டாடா தெரிவித்துஉள்ளார்.
டார்க் மோட்டார்ஸ் நிறுவனம், அடுத்த சில மாதங்களில், மின்சார மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்ய உள்ளது.ரத்தன் டாடா முதலீடு செய்ய இருப்பது குறித்து, டார்க் மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான கபில் ஷெல்கே கூறியதாவது:இந்திய வாகன துறை மிகப்பெரிய வளர்ச்சி மற்றும் மாற்றத்தை ஏற்படுத்தும் காலகட்டத்தில் உள்ளது என்ற எங்களுடைய நம்பிக்கைக்கு ஒப்புதல் அளிக்கும் விதமாக இருக்கிறது, ரத்தன் டாடாவின் முதலீடு.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)