பதிவு செய்த நாள்
15 அக்2019
23:48
புதுடில்லி:கடந்த
செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில்,
‘விப்ரோ’ நிறுவனத்தின் நிகர லாபம், 35 சதவீதம் அதிகரித்து, 2,552
கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இந்நிறுவனம், கடந்த
நிதியாண்டில் இதே இரண்டாவது காலாண்டில், நிகர லாபமாக, 1,889 கோடி
ரூபாயை மட்டுமே ஈட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.நடப்பு
நிதியாண்டின் 2-வது காலாண்டில், விப்ரோவின் மொத்த வருமானம்,
15 ஆயிரத்து, 875 கோடி ரூபாய். கடந்த
நிதியாண்டின் இதே
காலகட்டத்தில், மொத்த வருமானம், 15 ஆயிரத்து, 203 கோடி ரூபாயாக
இருந்தது.
மதிப்பீட்டு காலத்தில், நிறுவனத்தின் தகவல் மற்றும்
தொழில்நுட்ப சேவைகள் பிரிவின்
வருவாய், 14 ஆயிரத்து, 343 கோடி
ரூபாயாக உள்ளது. இது, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, 2.5 சதவீத
வளர்ச்சியாகும்.இது குறித்து, விப்ரோ நிறுவனத்தின் தலைமை நிதி
அதிகாரி ஜாட்டின் தலால் கூறியுள்ளதாவது:
வளர்ச்சியையே
முன்னுரிமையாக கொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
எதிர்காலத்துக்காக தொடர்ந்து முதலீடு செய்து வருகிறோம்.மேலும், நிறுவனத்தின் பங்குகளை திரும்ப பெறும் பணியை, செப்டம்பரில் வெற்றிகரமாக செய்து முடித்துள்ளோம்.இவ்வாறு அவர்கூறியுள்ளார்.
மேலும் ஐ.டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|