பதிவு செய்த நாள்
15 அக்2019
23:52
புதுடில்லி:நாட்டின்
ஏற்றுமதி, கடந்த செப்டம்பர் மாதத்தில், 6.57 சதவீதம் அளவுக்கு
குறைந்து, 26 பில்லியன் டாலராக, அதாவது, இந்திய மதிப்பில், 1.85
லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.
நாட்டின் ஏற்றுமதியில் முக்கிய
பங்கு வகிக்கும் துறைகளான பெட்ரோலியம், பொறியியல், தோல்,
ரசாயனம், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஆகியவற்றின்
ஏற்றுமதியில் சரிவு ஏற்பட்டதால், செப்டம்பர் மாத ஏற்றுமதி குறைந்துள்ளது.ஏற்றுமதி மட்டுமின்றி
இறக்குமதியும், 13.85 சதவீதம் அளவுக்கு குறைந்து, 77 ஆயிரத்து, 106 கோடி ரூபாயாக சரிந்து உள்ளது. இதையடுத்து, வர்த்தக பற்றாக்குறை, 1.06 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.
செப்டம்பர் மாதத்தில், முக்கியமான, 30 துறைகளில், 22 துறைகளில் ஏற்றுமதி குறைந்துஉள்ளது.நவரத்தினங்கள்
மற்றும் ஆபரணங்கள், பொறியியல் பொருட்கள், பெட்ரோலியப்
பொருட்கள் ஆகியவை முறையே, 5.56 சதவீதம், 6.2 சதவீதம், 18.6சதவீதமாக குறைந்துள்ளது.
மதிப்பீட்டு மாதத்தில், கச்சா எண்ணெய் இறக்குமதி, 18.33 சதவீதம் சரிந்துள்ளது. கச்சா
எண்ணெய் அல்லாத பொருட்கள் இறக்குமதி, 12.3 சதவீதம் குறைந்துள்ளது.
நடப்பு
நிதியாண்டில், ஏப்ரல் முதல், செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில்
ஏற்றுமதி, 2.39 சதவீதமும், இறக்குமதி, 7 சதவீதமும் சரிந்துள்ளது.தங்கம் இறக்குமதி, 50.82 சதவீதம்
சரிந்துள்ளது.
சேவைகள் துறை ஏற்றுமதி அதிகரிப்பு।
நாட்டின்
சேவைகள் துறை ஏற்றுமதி, 10.4 சதவீதம் அளவுக்கு ஆகஸ்ட் மாதத்தில்
அதிகரித்து உள்ளது; இதன் மதிப்பு, 1.30 லட்சம் கோடி ரூபாய் என, ரிசர்வ்
வங்கி தெரிவித்துள்ளது.இதுவே, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், 1.17 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. சேவைகள் துறை இறக்குமதியை பொருத்தவரை, ஆகஸ்ட் மாதத்தில், 85 ஆயிரத்து, 200 கோடி ரூபாயாக
உள்ளது. இது, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தை விட,16 சதவீதம் அதிகமாகும். நடப்பு
ஆண்டின் ஜூலை மாதத்தில், சேவைகள் துறை இறக்குமதி, 91 ஆயிரத்து, 93 கோடி ரூபாயாக இருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|