தாமிர இறக்குமதி அதிகரிப்பு 18 ஆண்டுகளில் இல்லாதது தாமிர இறக்குமதி அதிகரிப்பு 18 ஆண்டுகளில் இல்லாதது ...  பங்கு ஈவுத்தொகை  முதல்வரிடம் ஒப்படைப்பு பங்கு ஈவுத்தொகை முதல்வரிடம் ஒப்படைப்பு ...
உயரதிகாரிகள் மீது குற்றச்சாட்டு இன்போசிஸ் பங்குகள் வீழ்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 அக்
2019
07:01

புதுடில்லி: இன்போசிஸ் நிறுவனத்தின், தலைமை செயல் அதிகாரி சலீல் பரேக் மற்றும், தலைமை நிதி அதிகாரி நிலஞ்சன் ராய் ஆகியோர், குறுகிய கால வருவாய் மற்றும் லாபத்தை உயர்த்துவதற்காக, நெறிமுறையற்ற நடவடிக்கையில் ஈடுபட்டதாக, ‘நெறிமுறை கொண்ட ஊழியர்கள்’ என்ற பெயரில், ஒரு குழுவினரால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்நிறுவனத்தின் பங்குகள் விலை நேற்று, 16.21 சதவீதம் சரிந்தது. இதனால், நிறுவனத்தின் சந்தை மதிப்பும், 53 ஆயிரத்து, 451 கோடி ரூபாய் அளவுக்கு குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில், ஒரு பங்கின் விலை, 16.21 சதவீதம் சரிந்து, 643.30 ரூபாயாக குறைந்தது. தேசிய பங்குச் சந்தையில், 16.65 சதவீதம் குறைந்து, ஒரு பங்கின் விலை, 640 ரூபாயாக நிலைபெற்றது. இதையடுத்து, நிறுவனத்தின் சந்தை மதிப்பு, 2.76 லட்சம் கோடி ரூபாயாக சரிந்தது.நிறுவனத்தின் இரண்டு உயரதிகாரிகள் மீது, ஒரு குழுவினர் குற்றம் சாட்டியிருக்கும் நிலையில், நிறுவனத்தின் நடைமுறைப்படி இந்த புகாரானது தணிக்கை குழுவுக்கு அனுப்பப்பட்டிருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிறுவனத்தின் தலைவர் நந்தன் நிலேகனி, இப்புகார் மீது தனிக்கை குழு சுதந்திரமான விசாரணையை நடத்தும் என தெரிவித்துள்ளார். இன்போசிஸ் நிறுவனத்தின் சந்தைமதிப்பு சரிந்த நிலையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு வர்த்தகத்தினிடையே மீண்டும், 9 லட்சம் கோடி ரூபாயை தொட்டது. வர்த்தகத்தின் முடிவில், சந்தை மதிப்பு, 8.98 லட்சம் கோடி ரூபாயாக குறைந்தது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)