4வது மாதமாக தொடர்ந்து பொறியியல் ஏற்றுமதி சரிவு 4வது மாதமாக தொடர்ந்து பொறியியல் ஏற்றுமதி சரிவு ...  வருமான வரியில் மாற்றங்கள் செய்ய திட்டம் தொழில், வர்த்தக அமைப்புகளிடம் கருத்து கேட்கிறது நிதியமைச்சகம் வருமான வரியில் மாற்றங்கள் செய்ய திட்டம் தொழில், வர்த்தக அமைப்புகளிடம் ... ...
சில்லரை பணவீக்கம் அக்டோபரில் உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 நவ
2019
23:30

புதுடில்லி:நாட்டின் சில்லரை விலை பணவீக்கம், 15 மாதங்களில் இல்லாத வகையில், அக்டோபர் மாதத்தில், 4.62 சதவீதமாக அதிகரித்துள்ளது.

கடந்த செப்டம்பர் மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம், 3.99 சதவீதமாக இருந்த நிலையில், அக்டோபரில், 4.62 சதவீதமாக அதிகரித்துள்ளது.மேலும், இது ரிசர்வ் வங்கியின் நடுத்தர கால இலக்கான, 4 சதவீதத்தை விட அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபரில், சில்லரை பணவீக்கம், 3.38 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மதிப்பீட்டு மாதத்தில், உணவுப் பொருட்கள் விலை அதிகரித்து காணப்பட்டதால், சில்லரை பணவீக்கம் உயர்ந்துள்ளது.

அக்டோபரில் நுகர்வோர் உணவு விலை பணவீக்கம், 7.89 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது, கடந்த செப்டம்பரில், 5.1 சதவீதமாக இருந்தது.எரிசக்தி மற்றும் உணவுப் பொருள் தவிர்த்த முக்கிய பொருட்களின் சில்லரை பணவீக்கம், 3.5 சதவீதமாகும். இது செப்டம்பர் மாதத்தில், 4 சதவீதமாக இருந்தது.பருப்புகளின் சில்லரை பணவீக்கம், 11.72 சதவீதமாக அதிகரித்துள்ளது. முந்தைய மாதத்தில் இது, 8.4 சதவீதமாக இருந்தது.

காய்கறிகளின் பணவீக்கம் செப்டம்பரில், 11.4 சதவீதமாக இருந்த நிலையில், அக்டோபரில், 26 சதவீதமாக அதிகரித்துள்ளது.ரிசர்வ் வங்கி, சில்லரை விலை பணவீக்கத்தின் அடிப்படையில், அதன் நிதிக் கொள்கையை உருவாக்குகிறது. இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை, ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு கூடி, அதன் நிதிக் கொள்கையை அறிவிக்கிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)