பதிவு செய்த நாள்
13 நவ2019
23:32
ஐதராபாத்:மருந்துகள் சில்லரை விற்பனை நிறுவனமான, ‘மெட்பிளஸ்’ பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கான முயற்சியில் இறங்கி உள்ளது.
ஏழு மாநிலங்களில், 1,700 ஸ்டோர்களுடன் இயங்கி வருகிறது மெட்பிளஸ் நிறுவனம். இந்நிறுவனம், 700 கோடி ரூபாய் நிதியை திரட்டும் வகையில், பங்கு வெளியீட்டுக்கு வர திட்டமிட்டுள்ளது.இது குறித்து, ‘மெட்பிளஸ் ஹெல்த் சர்வீசஸ்’ நிறுவனத்தின் நிறுவனர் மதுகர் கங்கடி கூறியாதாவது:வரும், 2023ம் ஆண்டில், இந்தியா முழுக்க, 3,100 ஸ்டோர்கள் கொண்ட நிறுவனமாக மாற்றும் திட்டத்தில் உள்ளோம்.
தற்போது, 1,700 ஸ்டோர்கள் உள்ளன. வடகிழக்கு மாநிலங்கள், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் வர்த்தகத்தை விரிவுபடுத்த உள்ளோம்.நாங்கள், 700 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளோம்; இதற்கான வேலைகளை அடுத்த மாதத்தில் துவக்க இருக்கிறோம்.பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டப்படும் நிதி, நிறுவனத்தின் கடனை அடைப்பதற்கும், நிறுவன வளர்ச்சிக்கும் பயன்படுத்தப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.
இந்நிறுவனத்தில், நிறுவனர் வசம், 77 சதவீத பங்குகளும், ‘விப்ரோ’ தலைவர் அசிம் பிரேம்ஜி வசம், 13 சதவீத பங்குகளும், மீதி வேறு சிலர் வசமும் உள்ளன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|