தவறான, ‘பான்’ எண்ணுக்கு அபராதம் தவறான, ‘பான்’ எண்ணுக்கு அபராதம் ...  வர்த்தக பற்றாக்குறை குறைந்தது வர்த்தக பற்றாக்குறை குறைந்தது ...
ஆர்காம் இயக்குனர் பதவியிலிருந்து அனில் அம்பானி ராஜினாமா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 நவ
2019
03:14

புதுடில்லி: ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் பதவியை, அனில் அம்பானி ராஜினாமா செய்துள்ளார்.

கடனில் மூழ்கியுள்ள, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், அனில் அம்பானி இயக்குனர் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக, அது தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.அறிக்கையின் படி, அனில் அம்பானியுடன், சாயா விரானி, ரைனா கரானி, மஞ்சரி காக்கர், சுரேஷ் ரங்காச்சார் ஆகியோரும் தங்கள் இயக்குனர் பதவியை ராஜினாமா செய்துள்ளது தெரியவந்துள்ளது.

மேலும், நிறுவனத்தின் இயக்குனரும் தலைமை நிதி அதிகாரியுமான மணிகண்டனும் இதற்கு முன் ராஜினாமா செய்வதாக அறிவித்திருந்ததையும் அறிக்கையில் குறிப்பிட்டுஉள்ளது.இந்த ராஜினாமாக்களை, நிறுவனத்துக்கு கடன் வழங்கியவர்கள் குழுவிடம், அவர்களின் பரிசீலனைக்காக வழங்கப்பட்டுள்ளது.தற்போது, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் திவால் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனம், கடந்த செப்டம்பருடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில், 30 ஆயிரத்து, 142 கோடி ரூபாய் நிகர இழப்பை சந்தித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)