தகவல் தொழில்நுட்ப துறையில் 40 ஆயிரம் பேர் வேலையிழக்கலாம்தகவல் தொழில்நுட்ப துறையில் 40 ஆயிரம் பேர் வேலையிழக்கலாம் ...  புதிய பங்கு வெளியீடு சி.எஸ்.பி., வங்கி ரெடி புதிய பங்கு வெளியீடு சி.எஸ்.பி., வங்கி ரெடி ...
அக்டோபரில் வாகன விற்பனை பண்டிகையால் 11 சதவீதம் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 நவ
2019
07:06

புதுடில்லி : கடந்த அக்டோபரில், பயணியர் வாகன விற்பனை, பண்டிகை கால தேவையை ஒட்டி, 11 சதவீதம் அதிகரித்திருப்பதாக, வாகன முகவர்கள் கூட்டமைப்பான, ‘எப்.ஏ.டி.ஏ.,’ தெரிவித்துள்ளது.

இது குறித்து, மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த அக்டோபர் மாதத்தில், பயணியர் வாகன விற்பனை, 11 சதவீதம் அதிகரித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம், பண்டிகை காலத்தை முன்னிட்டு தேவை அதிகரித்தது தான்.இதனால், அக்டோபரில் மொத்தம், 2.48 லட்சம் பயணியர் வாகனங்கள் விற்பனை ஆகியுள்ளன. இதுவே, கடந்த ஆண்டு அக்டோபரில், 2.23 லட்சம் பயணியர் வாகனங்கள் விற்பனை ஆகி இருந்தன.

இருசக்கர வாகனங்களைப் பொறுத்தவரை அக்டோபரில், 5 சதவீதம் அதிகரித்து, 13.35 லட்சம் வாகனங்கள் விற்பனை ஆகியுள்ளன. இதுவே கடந்த ஆண்டில், இதே மாதத்தில், 12.70 லட்சம் வாகனங்கள் விற்பனை ஆகியுள்ளன.மூன்று சக்கர வாகனங்கள் விற்பனை, 4 சதவீதம் அதிகரித்துள்ளது. இருப்பினும், வர்த்தக வாகனங்கள் விற்பனை, 23 சதவீதம் அளவுக்கு சரிவை கண்டுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபரில், 87 ஆயிரத்து, 618 வாகனங்கள் விற்பனை ஆகியிருந்த நிலையில், கடந்த அக்டோபரில், 67 ஆயிரத்து, 60 வாகனங்கள் மட்டுமே விற்பனை ஆகியுள்ளன. பண்டிகை காலத்தை பொறுத்தவரை, நுகர்வோர் தேவை அதிகரித்துள்ளது. மேலும் வாகன விற்பனை வளர்ச்சி பாதைக்கு திரும்பியுள்ளது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)