பதிவு செய்த நாள்
03 டிச2019
07:14
சென்னை:எல்.ஐ.சி., பாலிசி சந்தாவை, இனி கட்டணமில்லாமல், ‘கிரெடிட் கார்டு’ வாயிலாக செலுத்தலாம் என, எல்.ஐ.சி., நிறுவனம் அறிவித்துள்ளது.
இது குறித்து, எல்.ஐ.சி., வெளியிட்ட செய்திக்குறிப்பு:‘டிஜிட்டல்’ பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், கிரெடிட் கார்டு வாயிலாக செலுத்தும் சந்தாவிற்கான கட்டணத்தை, எல்.ஐ.சி., நிறுவனம் ரத்து செய்துள்ளது.
இந்த முறை, டிச., 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. பாலிசி புதுப்பித்தல், சந்தாவை முன்கூட்டியே செலுத்துதல், கடன் மற்றும் கடன் வட்டியை திரும்ப செலுத்துதல் போன்றவற்றை, கிரெடிட் கார்டு, ‘ஆன்லைன்’ வாயிலாக, இனி கட்டணமில்லாமல் செலுத்தலாம். அனைத்து எல்.ஐ.சி., வசூல் மையங்களிலும், இந்த வசதி அமல்படுத்தப்பட்டு உள்ளது. ‘மைஎல்ஐசி ஆப்’ வாயிலாகவும், ஆன்லைன் சேவையை பாலிசிதாரர்கள் பெற்றுக் கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|