பதிவு செய்த நாள்
09 டிச2019
00:14
வாடிக்கையாளர்கள் பங்குகளை முறைகேடாக பயன்படுத்தியதாக, பங்கு வர்த்தக தரகு
நிறுவனம் கார்வி மீதுநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், பங்கு வர்த்தக வாடிக்கையாளர்கள் தங்கள் பாதுகாப்பிற்காக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை செயல்கள் வருமாறு:
‘டிமெட்’ கணக்கு உள்ள டெபாசிட்டரி நிறுவனத்திடம் மொபைல் எண் மற்றும் இ – மெயில் முகவரியை,‘அப்டேட்’ செய்யவும்.டிமெட் கணக்கில் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கு பின்னரும்
அனுப்பி வைக்கப்படும் ஸ்டேட்மென்டை கவனமாக பார்த்து உறுதி செய்யவும்.மூன்று மாதங்களுக்கு ஒரு முறையேனும் தரகு நிறுவனத்திடம் இருந்து, ‘லெட்ஜர் பாலனஸ் மற்றும் ஸ்டாக் ஸ்டேட்மென்டை’ பெறவும்.ஏதேனும் முறைகேடு இருந்தால் உடனே புகார்
செய்யவும்.
புரோக்கிங் கணக்கில் கூடுதல் பணம் வைத்திருப்பதை தவிர்க்கவும். பங்குகள் வாங்கும் போது சேமிப்பு கணக்கில் இருந்து மாற்றவும்.மேம்பட்ட பாதுகாப்பிற்காக வங்கி புரோக்கரிடம் டிமெட் கணக்கு துவக்கவும்.புரோக்கரின் நிதி நிலையை ஆய்வு செய்யவும்.டெபாசிட்டரிகளிடம் பதிவு செய்து கொண்டு, இணையம் அல்லது செயலி மூலம் உங்கள் கணக்கு தொடர்பான தகவல் பெறவும்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|