பதிவு செய்த நாள்
11 டிச2019
23:16
புதுடில்லி:வருவாய் குறைவு நெருக்கடி காரணமாக, ஜி.எஸ்.டி., வரி மற்றும் விகிதங்கள், ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் அதிகரிக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
வரும், 18ம் தேதியன்று, ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் நடைபெற இருக்கிறது. இக்கூட்டத்தில், இது குறித்த முடிவுகள் இறுதி செய்யப்படும் என தெரிகிறது. தற்போது, 5,12,18 மற்றும் 28 என, வரிவிகிதங்கள் உள்ளன.இந்நிலையில், பல்வேறு விதமான வாய்ப்புகள் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. 5 சதவீதத்தை, 8 சதவீதமாகவும்; 12 சதவீதத்தை, 15 சதவீதமாகவும் உயர்த்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு உள்ளது.
மேலும், சில வரிவிகிதங்களை ஒன்றிணைத்து, மொத்தம், 3 வரிவிகிதங்கள் மட்டுமே இருக்கும் வகையிலான மாற்றமும் ஆலோசிக்கப்பட்டுஉள்ளது.கூடவே, விதிவிலக்கு பெறப்பட்டுள்ள பொருட்களுக்கு, புதிதாக வரி விதிப்பதற்கான வாய்ப்பு குறித்தும் அலசப் பட்டு உள்ளது.நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் முதல் நவம்பர் மாதம் வரையிலான காலத்தில், ஜி.எஸ்.டி., வரி வருவாய், பட்ஜெட் மதிப்பீட்டை விட, 40 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளதால், இந்த முடிவுக்கு அரசு வந்திருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|