வட்டி விகிதத்தை குறைத்தது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வட்டி விகிதத்தை குறைத்தது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ...  உச்சத்தில் அன்னிய செலாவணி இருப்பு உச்சத்தில் அன்னிய செலாவணி இருப்பு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
ஓராண்டை பூர்த்தி செய்த ரிசர்வ் வங்கி கவர்னர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 டிச
2019
23:19

மும்பை:ரிசர்வ் வங்கி கவர்னராக, சக்திகாந்த தாஸ் பதவியேற்று, ஓராண்டு பூர்த்தியாகி உள்ளது.

ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்த உர்ஜித் படேல், ஓய்வு பெறுவதற்கு ஒன்பது மாதங்கள் பாக்கி இருந்த நிலையில், திடீரென பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.உர்ஜித் ராஜினாமா செய்ததை அடுத்து, பொருளாதார விவகாரங்கள் துறை செயலராக பணியாற்றி ஓய்வு பெற்றிருந்த சக்தி காந்ததாஸ், ரிசர்வ் வங்கியின் கவர்னராக, கடந்த ஆண்டு டிசம்பர், 12ல் நியமிக்கப்பட்டார்.


ரிசர்வ் வங்கியின் கவர்னராக இவர் அறிவிக்கப்பட்டபோது, பலரது புருவங்கள் உயர்ந்தன. சக்திகாந்த தாஸ், தற்போது ரிசர்வ் வங்கியின், 25வது கவர்னராக பொறுப்பேற்று உள்ளார். ரிசர்வ் வங்கிக்கும், மத்திய அரசுக்கும் இடையே மோதல் போக்கு இருப்பது வெளிப்படையாக தெரிந்த சூழலில், சக்திகாந்த தாஸ் கவர்னராக பொறுபேற்றார்.இந்நிலையில், பொருளாதார நெருக்கடியும் சேர்ந்து கொள்ள, பெரும் சவால்களை சந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.


இந்த ஓராண்டில் பல்வேறு சாதனைகளையும், சவால்களையும் அவர் சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
* தொடர்ந்து ஐந்து முறை வட்டி குறைப்பை அமல் செய்தார்


* இதுவரை யாரும் செய்திராத வகையில், ஆகஸ்ட் மாதத்தில், 0.35 சதவீதம் என, புதிய அளவில் வட்டி குறைப்பை அறிமுகப்படுத்தினார்


* உலகமே வட்டி குறைப்பை எதிர்பார்த்திருந்த நிலையில், அதற்கு மாறாக, கடந்த முறை வட்டியில் எந்த மாற்றமும் இல்லை என, அறிவித்தார்

* ரெப்போ வட்டி குறைப்பின் பலனை, வங்கிகள் அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்க, தொடர்ந்து வற்புறுத்தி, ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளார்


* ரிசர்வ் வங்கியின் இருப்பிலிருந்து, 1.76 லட்சம் கோடி ரூபாயை அரசுக்கு கொடுத்தார்


* என்.இ.எப்.டி., முறையில், 16ம் தேதியிலிருந்து அனைத்து நாட்களிலும், 24 மணி நேரமும் பணப் பரிவர்த்தனை செய்யலாம் என அறிவித்தார்


* தொடர்ந்து, ‘டிஜிட்டல்’ பணப் பரிவர்த்தனை முயற்சிகளுக்கு, முழு ஆதரவை வழங்கி வருகிறார்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
முதல் சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர், சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
business news
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
business news
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
business news
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
business news
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)