பதிவு செய்த நாள்
12 டிச2019
23:53
புதுடில்லி:கடந்த அக்டோபர் மாதத்தில், நாட்டின் தொழில் துறை உற்பத்தி, 3.8 சதவீதமாக குறைந்துள்ளது. தொடர்ந்து மூன்றாவது மாதமாக, தொழில் துறை உற்பத்தி சரிந்துள்ளது.சுரங்கம் மற்றும் மின்சார துறைகளில் உற்பத்தி குறைந்தது, இந்த சரிவுக்கு காரணமாக அமைந்துள்ளது.
இது குறித்து, தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:நாட்டின் தொழில் துறை உற்பத்தி, அக்டோபரில், 3.8 சதவீதமாக குறைந்துள்ளது. இதுவே கடந்த ஆண்டு அக்டோபரில், 8.4 சதவீதமாக இருந்தது.நடப்பு ஆண்டில், செப்டம்பரில், 4.3 சதவீதமாகவும்; ஆகஸ்ட்டில் 1.4 சதவீதமாகவும் குறைந்து இருந்தது. ஜூலை மாதத்தில், 4.9 சதவீதமாக அதிகரித்திருந்தது.நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில், தொழில் துறை உற்பத்தி, 0.5 சதவீதமாக சரிந்துஉள்ளது.
இதுவே, கடந்த நிதியாண்டில், 5.7 சதவீதமாக இருந்தது.மேலும், தயாரிப்பு துறை வளர்ச்சி, கடந்த ஆண்டு அக்டோபரில், 8.2 சதவீதமாக இருந்த நிலையில், இந்த ஆண்டு அக்டோபரில், 2.1 சதவீதமாக குறைந்துள்ளது.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|