பதிவு செய்த நாள்
12 டிச2019
23:54
புதுடில்லி:கடந்த நவம்பர் மாதத்தில், கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத வகையில், சில்லரை விலை பணவீக்கம், 5.54 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்த பணவீக்க உயர்வுக்கு, உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பே முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
இது குறித்து, தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:நவம்பர் மாதத்தில், சில்லரை விலை பணவீக்கம், 5.54 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதுவே, கடந்த ஆண்டு நவம்பரில், 2.33 சதவீதமாக குறைந்து இருந்தது. நடப்பு ஆண்டு அக்டோபரில், 4.62 சதவீதமாக இருந்தது.
நடப்பு ஆண்டு நவம்பர் மாதத்தில், உணவுப் பொருட்கள் பிரிவின் சில்லரை பணவீக்கம், 10.01 சதவீதம் அதிகரித்துள்ளது. அக்டோபரில் இது, 7.89 சதவீதமாக இருந்தது. கடந்த ஆண்டு நவம்பரில், மைனஸ் 2.61 சதவீதமாக இருந்தது. இதற்கு முன் சில்லரை விலை பணவீக்கம், 2016ம் ஆண்டு ஜூலை மாதத்தில் அதிகமாக இருந்தது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|