பதிவு செய்த நாள்
14 டிச2019
23:45
மும்பை:நாட்டின் அன்னிய செலாவணி இருப்பு, இதுவரை இல்லாத அளவில், 453 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.
இது குறித்து, ரிசர்வ் வங்கி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு, கடந்த, 6ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 16 ஆயிரத்து, 330 கோடி ரூபாய் அதிகரித்து, 453 பில்லியன் டாலராக அதாவது, இந்திய மதிப்பில், 32.16 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துஉள்ளது.
இது, இதுவரை இல்லாத உயர்வாகும்.கடந்த வாரத்தில், அன்னிய செலாவணி இருப்பு, 17 ஆயிரத்து, 608 கோடி ரூபாய் அதிகரித்து, 32.03 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத் தக்கது.மதிப்பீட்டு வாரத்தில், அன்னிய செலாவணி இருப்பு அதிகரிப்பதற்கு முக்கிய காரணம், அன்னிய செலாவணி மதிப்பு அதிகரித்ததே ஆகும். இவ்வாறு, அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|