பதிவு செய்த நாள்
14 டிச2019
23:48
மும்பை:நாட்டிலுள்ள முன்னணி பங்குச் சந்தைகளில் ஒன்றான, தேசிய பங்குச் சந்தை, அடுத்த ஆண்டில் புதிய பங்கு வெளியீட்டில் இறங்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இது குறித்து, சந்தை வட்டாரத்தில் உள்ள உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:தேசிய பங்குச் சந்தை, அடுத்த ஆண்டில், புதிய பங்கு வெளியீட்டில் இறங்க திட்டமிட்டு வருகிறது.ஏற்கனவே இம்முயற்சியில் இறங்கி, சில காரணங்களால் பங்கு வெளியீட்டுக்கு வரமுடியாமல் போய்விட்டது. தற்போது மீண்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன், உயரதிகாரிகளும், சில பங்குச் சந்தை தரகர்களும் கூட்டு சேர்ந்து, ‘சர்வர், டேட்டா’ வசதி உள்ளிட்டவற்றை வழங்குவது சம்பந்தமாக, சில முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இதன் காரணமாக, அந்த சமயத்தில் பங்கு வெளியீட்டுக்கு வரமுடியாமல் போய்விட்டது.
தற்போது இப்பிரச்னைகள் தீர்ந்த நிலையில், பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, செபி மற்றும் நிதியமைச்சகத்தை, தேசிய பங்குச் சந்தை அணுகி உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|