பதிவு செய்த நாள்
15 டிச2019
23:54
கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய் விலை,
கடந்த வாரம், மூன்று வார உயர்வை எட்டியது. சர்வதேச சந்தையில், ஒரு
பேரல் விலை, 60 அமெரிக்க டாலர் என்ற நிலையைக் கடந்தது.
இம் மாதம்
முதல் வாரத்தில் நடைபெற்ற, வளைகுடா எண்ணெய் உற்பத்தி நாடுகளின்
கூட்டமைப்பு மற்றும் ஆசிய நாடுகளின் கூட்டத்தில், உற்பத்தி
குறைப்பு நடவடிக்கையை மீண்டும் அதிகரிப்பது என முடிவு
செய்யப்பட்டது.
எனவே, ஜனவரி முதல், புதிய ஒப்பந்த நடைமுறை
அமலுக்கு வரும். இதன்படி, அதிக அளவிலான உற்பத்தி குறைப்பு நடவடிக்கை
அமலுக்கு வருவதால், சந்தையில் தட்டுப்பாடு நிலவும் என்ற
அச்சத்தில், கடந்த சில வாரங்களாகவே, விலை அதிகரித்து வரும் போக்கு
காணப்படுகிறது.
இதற்கு
முன்பு இருந்த ஒப்பந்தப்படி, தினசரி உற்பத்தி குறைப்பு, 12 லட்சம்
பேரல்கள் ஆக இருந்தது. இது ஒட்டு மொத்த உலக உற்பத்தியில், 1.7
சதவீதமாகும்.தற்போது புதிய அறிவிப்பு காரணமாக, உற்பத்தி
குறைப்பு, 21 லட்சம் பேரல்கள் ஆகும். இதனால், சந்தையில் தட்டுப்பாடு
நிலவும் என்ற அச்சத்தில் விலை உயர்ந்து அதிகமானது.
மேலும்,
அமெரிக்காவின் பொருளாதார காரணிகளில் ஒன்றான, அரசு துறையில்
புதிதாக பணிக்கு அமர்த்தப்பட்டவர்கள் எண்ணிக்கை குறித்த அறிக்கை,
முந்தைய வாரத்தில் வெளியானது. இது, நவம்பர் மாதத்தில்
எதிர்பார்த்ததை விட அதிகமாகவும், 10 மாத உயர்விலும் இருந்தது.
இதையடுத்து, பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும், அதனால் தேவை உயரும்
என்ற எதிர்பார்ப்பில், கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வர்த்தகம் ஆனது.
அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே நடந்து வரும் வர்த்தக மோதலை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், அமெரிக்காவிலிருந்து விவசாய பொருட்களை,
சீனா இறக்குமதி செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.உலக
அளவில், கச்சா எண்ணெய் இறக்குமதியில் முதன்மையான நாடு
சீனாவாகும். சீனாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழில்துறை
வளர்ச்சி, கச்சா எண்ணெய் தேவையின் அளவை நிர்ணயிக்கிறது. சீனாவின்
தேவை அதிகரிக்கும் போது, கச்சா எண்ணெய் விலை உயரும்.
கஜகஸ்தான்
நாட்டின் எண்ணெய் உற்பத்தி, கடந்த வாரத்தில், 8 சதவீதம் சரிந்து,
2.36 லட்சம் டன் ஆனது. இந்நாட்டின் முக்கிய எண்ணெய் உற்பத்தி
குழாயில் நடைபெற்ற பராமரிப்பு
பணிகள் காரணமாக, உற்பத்தி சரிவு
ஏற்பட்டது.
தங்கம் வெள்ளி
தங்கம் மற்றும் வெள்ளி, கடந்த வாரம் ஆரம்ப நாட்களில் விலை சரிந்து வர்த்தகம் ஆகின.
அமெரிக்காவின்
பொருளாதார காரணிகளில் ஒன்றான, அரசு துறையில் புதிதாக பணிக்கு
அமர்த்தப்பட்டவர்கள் எண்ணிக்கை குறித்த அறிவிப்பு, கடந்த வாரம்
வெளியானது.
இதில், நவம்பர் மாதத்தில், அதற்கு முந்தைய 10 மாதங்களில் இல்லாத அளவுக்கு,
எண்ணிக்கை அதிகமாக இருந்தது. இது எதிர்பார்த்ததை விடஅதிகமாகும்.
இதையடுத்து,
பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என்ற கண்ணோட்டத்திலும், மேலும்,
அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே நடந்து வந்த வர்த்தக மோதல்
குறித்த பேச்சில் முன்னேற்றம் காணப்படும் என்ற எதிர்பார்ப்பிலும்,
தங்கத்தின் விலை சரிந்து வர்த்தகம் ஆனது.
இருப்பினும், வார இறுதி
நாட்களில், இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக மோதல்
உடன்படிக்கையில் முன்னேற்றம் ஏற்படாததால், முதலீட்டாளர்கள்,
தங்களது முதலீடுகளை பாதுகாப்பாக முதலீடு செய்யும் வகையில்,
தங்கம் மீது ஆர்வத்தை அதிகரித்தனர். இதனால், பொருள் வாணிப சந்தையில், தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்ந்து காணப்பட்டது.
கடந்த
வாரத்தில் நடைபெற்ற, அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகித குழு
கூட்டத்தில், வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமும்
செய்யப்படாமல், அதே நிலை நீடிக்கும் என
அறிவிக்கப்பட்டது.நடப்பு
ஆண்டில் இதுவரை, மூன்று முறை வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது
குறிப்பிடத்தக்கதாகும். வட்டி விகிதம் குறைக்கப்படும்போது, அரசு
கருவூலங்களில் செய்துள்ள முதலீடுகளின் ஆதாயம் குறையும்.
இதனால்,
முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடுகளை அதிகரிப்பர். இதன்
காரணமாகவே, மே முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டங்களில்,தங்கம் விலை உயர்ந்தது. அதன்பிறகு, நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் சற்று குறைவாக காணப்படுகிறது.அமெரிக்க
பொருளாதார வளர்ச்சி, எதிர்பார்த்த அளவில் உயரும்போது, வட்டி விகிதங்கள் அதிகரிக்க வாய்ப்பு உண்டாகும்.
பொதுவாக வட்டி விகிதமும், தங்கமும் எதிர்மறையான போக்கை கொண்டவை. வட்டி
விகிதம் உயரும்போது, அரசு மற்றும் அரசு சார்ந்த முதலீடுகளில் ஆதாயம் அதிகரிக்கும். இச் சூழலில், முதலீட்டாளர்கள் அவற்றில் முதலீட்டை அதிகரிப்பது வாடிக்கையாகும். மாறாக,
வட்டி விகிதம் குறையும்போது, முதலீட்டாளர்கள், அதிக லாபமீட்டும்
பொருட்கள் மீது
முதலீடு செய்வர். இதில் தங்கத்தின் மீதான முதலீடுமுதலிடம் வகிக்கிறது.
செம்பு
செம்பு விலை, கடந்த வாரம் வாரம் ஆரம்பம் முதலே அதிகரித்து, வர்த்தகம் ஆனது.சீனா
மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே நடந்துவரும் வர்த்தக
மோதல் குறித்த பேச்சு, பயன் தரும் என்ற எதிர்பார்ப்பில், பொருள்
சந்தையில், கனிமங்களில் சிறிதளவு விலை உயர்வு காணப்பட்டது.
உலக
அளவில், அதிக அளவில் கனிமங்கள் மற்றும் தொழிற்சாலை மூலதனப்
பொருட்களை உபயோகிப்பதில், சீனா முதலிடம் பிடிக்கிறது. எனவே, இந்த நாட்டின் ஏற்றுமதியில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள், கனிமங்களின் விலைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.நவம்பர் மாதத்தின் தொழில்துறை வளர்ச்சி கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, சிறிய அளவிலான உயர்வை சந்தித்துள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|