பதிவு செய்த நாள்
15 டிச2019
23:56
வருமான வரி கணக்கு தாக்கல் செய்யத்தவறியவர்கள், பெரிய அளவில் அபராதம் செலுத்துவதை தவிர்க்க, வரும், 31ம் தேதிக்குள் தாமதமான வரித்தாக்கலை செய்ய வேண்டும்.
கடந்த, 2017ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட பொது பட்ஜெட்டில், குறித்த காலத்தில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இது, 2017நிதியாண்டில் அமலுக்கு வந்தது.
கடந்த, 2018 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கைதாக்கல் செய்வதற்கான
நீட்டிக்கப்பட்ட கெடு, ஆகஸ்ட் 31ம் தேதி முடிவடைந்தது.இந்த கெடுவுக்குள்வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாதவர்கள், ‘பிலேடட் ரிடர்ன்’ என குறிப்பிடப்படும் தாமதமான வரி கணக்கைதாக்கல் செய்யலாம்.வரும், 31ம் தேதிக்குள் தாமதமாக வரித்தாக்கல் செய்து
முடித்துவிட்டால், 5,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்.
எனினும், டிசம்பர், 31ம் தேதிக்குள் வரித்தாக்கல் செய்யவில்லை எனில், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்.எனினும்,
ஒருவரது மொத்த வருமானம், வரி செலுத்துவதற்கான வருமான
வரம்பிற்குள் இருந்தால், தாமதமாக வரித்தாக்கல் செய்தாலும்
அபராதம் பொருந்தாது.இந்த வரம்பு சராசரி நபர்களுக்கு, 2.5 லட்சம் ரூபாய்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|