பதிவு செய்த நாள்
22 ஜன2020
06:29
புதுடில்லி : ஸ்ரீ பஜ்ரங் பவர் அண்டு இஸ்பத் நிறுவனம், பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கான அனுமதியை, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’யிடமிருந்து பெற்றுள்ளது.
பஜ்ரங் பவர் நிறுவனம், ஐ.பி.ஓ., எனும், புதிய பங்கு வெளியீட்டின் மூலம், 500 கோடி ரூபாய் நிதி திரட்டுவதற்காக, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபியிடம், 2018ம் ஆண்டு செப்டம்பரில் விண்ணப்பம் செய்திருந்தது.இதையடுத்து, விண்ணப்பத்தை பரிசீலனை செய்த செபி, பஜ்ரங் பவர் நிறுவனம், பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கான அனுமதியை வழங்கி உள்ளது. இந்த ஆண்டில் வழங்கப்பட்டுள்ள முதல் அனுமதி இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிறுவனம் உருக்கு தயாரிப்பில் ஈடுபட்டுஉள்ளது.இந்நிறுவனத்தின் பங்குகளின் முகமதிப்பு, 10 ரூபாயாகும். இந்த பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டவிருக்கும், 500 கோடி ரூபாயை கொண்டு, கடன்களை திருப்பிச் செலுத்தவும், நிர்வாக செலவுகளுக்கு பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.இந்நிறுவனத்தின் பங்கு வெளியீட்டுக்கான பணிகளை, ஐ.டி.பி.ஐ., கேப்பிட்டல் மார்க்கெட்ஸ் அண்டு செக்யூரிட்டீஸ், எஸ்.பி.ஐ., கேப்பிட்டல் மார்க்கெட்ஸ் ஆகிய நிறுவனங்கள் நிர்வகிக்கின்றன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|