தனியாருக்கு எந்தெந்த பணிகள்  பி.எஸ்.என்.எல்., ஆலோசனை தனியாருக்கு எந்தெந்த பணிகள் பி.எஸ்.என்.எல்., ஆலோசனை ...  பட்ஜெட் தாக்கல் அன்று பங்குச் சந்தைகள் இயங்கும் பட்ஜெட் தாக்கல் அன்று பங்குச் சந்தைகள் இயங்கும் ...
நுகர்பொருட்கள் துறை வளர்ச்சி அதிகரிக்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜன
2020
06:52

மும்பை : நுகர்பொருட்கள் துறை வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில், 9 சதவீதமாக இருக்கும் என்றும், அடுத்த நிதியாண்டில் வளர்ச்சி பெறும் என்றும், ‘கிரிசில்’ நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

நாட்டின் நுகர்பொருட்கள் துறை, 4 லட்சம் கோடி ரூபாய் மதிப்பு கொண்டதாகும். இத்துறையின் வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில், 9 சதவீதமாக இருக்கும் என்றும், அடுத்த நிதியாண்டில், 11 சதவீதமாக அதிகரிக்கும் என்றும், கிரிசில் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. இந்த ஆய்வறிக்கையில், மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:நுகர்பொருட்கள் துறையின் வளர்ச்சி, வரும் மார்ச், ஏப்ரல் மாதங்களில அதிகரிக்க துவங்கும். நீர்த்தேக்கங்களில், மழை பொழிவு காரணமாக, முந்தைய ஆண்டை விட, 40 சதவீதம் அளவுக்கு அதிக நீர் தேக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, விவசாயம் வளர்ச்சி பெறும் என்பதால், கிராமப்புற தேவைகளும் அதிகரிக்க துவங்கும்.மேலும், உள்கட்டமைப்பு தேவைகளுக்காக அரசு அதிகம் செலவிடுவதும், கிராமப்புற வருவாயை அதிகரிக்க உதவும். இது நுகர்பொருள் தேவையையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.பொதிந்து வழங்கப்படும் உணவுப் பொருட்கள் பிரிவில், வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில், 10 சதவீதமாகவும், அடுத்த நிதியாண்டில், 12 சதவீதமாகவும் இருக்கும் என, எதிர்பார்க்கலாம்.

தனிநபர் மற்றும் வீட்டு ஆரோக்கிய பொருட்கள் பிரிவில், நடப்பு நிதியாண்டில், வளர்ச்சி, 6 முதல், 7 சதவீதமாக குறைந்து இருக்கும். இது, அடுத்த நிதியாண்டில், 8 முதல், 9 சதவீதம் வரை அதிகரிக்கும்.இவ்வாறு, கிரிசில் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நீல்சன் ஆய்வறிக்கைநுகர்பொருட்கள் துறை வளர்ச்சி, நடப்பு, 2020ம் ஆண்டில், 9 முதல், 10 சதவீதமாக இருக்கும் என, நீல்சன் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. கடந்த, 2019ல், இத்துறை வளர்ச்சி, மின்னணு வர்த்தகத்தையும் சேர்த்து, 9.7 சதவீதமாக இருந்தது. கடந்த, 2019ம் ஆண்டு மிகவும் கடினமான ஆண்டாக அமைந்தது.

அரசின் ஆதரவான கொள்கைகள், பணவீக்கம் குறையும் என்ற எதிர்பார்ப்பு உள்ளிட்டவை காரணமாக, நடப்பு, 2020ல், வளர்ச்சி நிலையானதாக இருக்கும்.இவ்வாறு நீல்சன் நிறுவனம், தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)