பதிவு செய்த நாள்
22 ஜன2020
06:52
மும்பை : நுகர்பொருட்கள் துறை வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில், 9 சதவீதமாக இருக்கும் என்றும், அடுத்த நிதியாண்டில் வளர்ச்சி பெறும் என்றும், ‘கிரிசில்’ நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
நாட்டின் நுகர்பொருட்கள் துறை, 4 லட்சம் கோடி ரூபாய் மதிப்பு கொண்டதாகும். இத்துறையின் வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில், 9 சதவீதமாக இருக்கும் என்றும், அடுத்த நிதியாண்டில், 11 சதவீதமாக அதிகரிக்கும் என்றும், கிரிசில் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. இந்த ஆய்வறிக்கையில், மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:நுகர்பொருட்கள் துறையின் வளர்ச்சி, வரும் மார்ச், ஏப்ரல் மாதங்களில அதிகரிக்க துவங்கும். நீர்த்தேக்கங்களில், மழை பொழிவு காரணமாக, முந்தைய ஆண்டை விட, 40 சதவீதம் அளவுக்கு அதிக நீர் தேக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, விவசாயம் வளர்ச்சி பெறும் என்பதால், கிராமப்புற தேவைகளும் அதிகரிக்க துவங்கும்.மேலும், உள்கட்டமைப்பு தேவைகளுக்காக அரசு அதிகம் செலவிடுவதும், கிராமப்புற வருவாயை அதிகரிக்க உதவும். இது நுகர்பொருள் தேவையையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.பொதிந்து வழங்கப்படும் உணவுப் பொருட்கள் பிரிவில், வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில், 10 சதவீதமாகவும், அடுத்த நிதியாண்டில், 12 சதவீதமாகவும் இருக்கும் என, எதிர்பார்க்கலாம்.
தனிநபர் மற்றும் வீட்டு ஆரோக்கிய பொருட்கள் பிரிவில், நடப்பு நிதியாண்டில், வளர்ச்சி, 6 முதல், 7 சதவீதமாக குறைந்து இருக்கும். இது, அடுத்த நிதியாண்டில், 8 முதல், 9 சதவீதம் வரை அதிகரிக்கும்.இவ்வாறு, கிரிசில் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நீல்சன் ஆய்வறிக்கைநுகர்பொருட்கள் துறை வளர்ச்சி, நடப்பு, 2020ம் ஆண்டில், 9 முதல், 10 சதவீதமாக இருக்கும் என, நீல்சன் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. கடந்த, 2019ல், இத்துறை வளர்ச்சி, மின்னணு வர்த்தகத்தையும் சேர்த்து, 9.7 சதவீதமாக இருந்தது. கடந்த, 2019ம் ஆண்டு மிகவும் கடினமான ஆண்டாக அமைந்தது.
அரசின் ஆதரவான கொள்கைகள், பணவீக்கம் குறையும் என்ற எதிர்பார்ப்பு உள்ளிட்டவை காரணமாக, நடப்பு, 2020ல், வளர்ச்சி நிலையானதாக இருக்கும்.இவ்வாறு நீல்சன் நிறுவனம், தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|