அடுத்த நிதியாண்டில் ஜி.டி.பி., 5.5 சதவீதமாக இருக்கும் அடுத்த நிதியாண்டில் ஜி.டி.பி., 5.5 சதவீதமாக இருக்கும் ...  இந்தியன் வங்கி நிகர லாபம்  62 சதவீதம் அதிகரிப்பு இந்தியன் வங்கி நிகர லாபம் 62 சதவீதம் அதிகரிப்பு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
யெஸ் பேங்க் தோல்வியடையாது எஸ்.பி.ஐ., தலைவர் அறிவிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜன
2020
05:28

புதுடில்லி: ‘யெஸ் பேங்க் தோல்வியடைய அனுமதிக்கப்பட மாட்டாது’ என, எஸ்.பி.ஐ., வங்கி தலைவர் ரஜ்னிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் மேலும் கூறியுள்ளதாவது:தனியார் துறை வங்கியான யெஸ் பேங்க், தோல்வியடைய அனுமதிக்கப்பட மாட்டாது. அதன் நிதி நிலைமையை சரி செய்வதற்கான வழி உருவாகும்.யெஸ் பேங்கின் வரவு – செலவு கணக்கு, 2.84 லட்சம் கோடி ரூபாயாகும். எனவே, இந்நிறுவனத்தை தோல்வியடைய விட்டுவிடக்கூடாது என எனக்கு தோன்றுகிறது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.யெஸ் பேங்க் நிறுவனத்தின் பங்குகள் விலை, ஓராண்டில், 80 சதவீதத்துக்கும் மேலாக சரிந்ததுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிறுவனத்தின் நிறுவனர் ரானா கபூர் திடீரென வெளியேறியது, சொத்து தரம் சரிந்தது, வாராக்கடன் விவகாரம், மூலதனம் குறைந்தது என, பல சிக்கல்களில் சிக்கி உள்ளது இந்நிறுவனம்.தற்போது, மூலதனத்தை அதிகரிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது. கடந்த வாரம், இந்நிறுவனத்தின் நிர்வாக குழு, 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை, தகுதி வாய்ந்த நிறுவன முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டிக் கொள்வதற்கு அனுமதி வழங்கி உள்ளது. மேலும், இந்நிறுவனம் பங்குகளை விற்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மூலம், நிதிநிலையை சரி செய்யும் முயற்சியில் உள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
முதல் சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர், சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
business news
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
business news
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
business news
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
business news
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)