பதிவு செய்த நாள்
26 ஜன2020
02:38
புதுடில்லி : நடப்பு நிதியாண்டில், ‘பதஞ்சலி’ நிறுவனத்தின் விற்றுமுதல், 25 ஆயிரம் கோடி ரூபாயை எட்டும் என, எதிர்பார்ப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிதி நெருக்கடியில் சிக்கியிருந்த, ‘ருச்சி சோயா’ நிறுவனத்தை, சமீபத்தில் பதஞ்சலி கையகப்படுத்தியது. இந்நிலையில், நடப்பு நிதியாண்டில், 25 ஆயிரம் கோடி ரூபாய் விற்று முதலை எதிர்ப்பார்ப்பதாக தெரிவித்துள்ளது.இது குறித்து, நிறுவனர் பாபா ராம்தேவ் கூறியதாவது:நடப்பு நிதியாண்டில் பதஞ்சலி, ருச்சி சோயா ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து, 25 ஆயிரம் கோடி ரூபாய் விற்றுமுதலை எட்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இதில், பதஞ்சலியின் பங்கு, 12 ஆயிரம் கோடி ரூபாயாகவும்; ருச்சி சோயாவின் பங்களிப்பு, 13 ஆயிரம் கோடி ரூபாயாகவும் இருக்கும்.அடுத்த ஐந்து ஆண்டுகளில், விற்றுமுதல், 50 ஆயிரம் கோடி ரூபாயிலிருந்து, 1 லட்சம் கோடி ரூபாய் வரை அதிகரிக்கும் என, எதிர்பார்க்கிறோம். மேலும், அடுத்த ஐந்து ஆண்டுகளில், எச்.யு.எல்., நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி, இந்தியாவின் மிகப்பெரிய நுகர்பொருள் நிறுவனமாக பதஞ்சலி உயரும். அத்துடன், ருச்சி சோயாவின் வளர்ச்சியும் மூன்று மடங்கு அதிகரிக்கும் என கருதுகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|