இந்திய பங்கு சந்தைகளை பாதித்த சீனாவின் வைரஸ் இந்திய பங்கு சந்தைகளை பாதித்த சீனாவின் வைரஸ் ...  மாருதி நிகர லாபம் 4.13 சதவீதம் அதிகரிப்பு மாருதி நிகர லாபம் 4.13 சதவீதம் அதிகரிப்பு ...
பட்ஜெட்டில் எதிர்பார்க்கும் அறிவிப்புகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஜன
2020
06:11

மும்பை : அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், நுகர்வோர் தேவையை அதிகரிக்கும் வகையிலான அறிவிப்புகள் வெளியாகலாம் என, ‘பேங்க் ஆப் அமெரிக்கா செக்யூரிட்டீஸ்’ ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

மாறும் வாய்ப்புமத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பிப்., 1ம் தேதியன்று, அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார்.இந்நிலையில், இந்த பட்ஜெட் குறித்து, பேங்க் ஆப் அமெரிக்கா செக்யூரிட்டீஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பட்ஜெட் அறிவிப்பில், நுகர்வோர் தேவையை அதிகரிக்கும் வகையிலான, குறுகிய கால துாண்டுதல் திட்டங்களை அறிவிக்கக் கூடும்.

அரசு, இத்தகைய தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தவறினால், தற்போதைய வளர்ச்சி மந்தநிலை, ஒரு சுழற்சி என்ற நிலையிலிருந்து மாறி, ஒரு கட்டமைப்பாக மாறும் வாய்ப்பு இருக்கிறது.அனைத்து தரப்பினரின் கண்களும், புதிய பட்ஜெட் அறிவிப்புகள் மீது உள்ளன. நடவடிக்கைகள் தேவைஇந்நிலையில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 5 சதவீதமாக குறையும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், வளர்ச்சியை துாண்டுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

சமூக செலவினங்கள் நீண்ட காலத்திற்கு மிகவும் அவசியமானவை. அதே சமயம், பொருளாதார மந்தநிலை, ஒரு சுழற்சி என்ற நிலையிலிருந்து மாறி, அடுத்து, அது ஒரு கட்டமைப்பு என்ற நிலையை எட்டுவதை தடுக்க, குறுகிய கால சீர்திருத்த நடவடிக்கைகள் தேவை.எனவே, குறுகிய கால சீர்திருத்த நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும் என எதிர்பார்க்கிறோம்.சந்தையை பொறுத்தவரை, இரண்டு குறிப்பிட்ட விஷயங்கள் குறித்து கவனிக்கும். அது, தனிநபர் மற்றும் நிறுவனங்கள் சம்பந்தமான வரி விதிப்பு குறித்த நடவடிக்கைகள்.

நீண்டகால மூலதன ஆதாய வரி கட்டமைப்பில் மாறுதல்கள், பத்திர பரிவர்த்தனை வரியை குறைத்தல் மற்றும் ஈவுத் தொகை வினியோக வரி குறைப்பு ஆகியவை, இந்த வரி மாற்ற விஷயத்தில் அடங்கும்.தனிநபர் வருமான வரி விதிப்பில் மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் இருப்பதாக கருதுகிறோம். குறைந்த வருமானம் ஈட்டுபவர்களுக்கு நிவாரணம் வழங்குவது, வளர்ச்சிக்கு வழிவகுப்பதாக அமையும். இருப்பினும், வரிச் சலுகைகள் சிறிய அளவில் இருக்கவும் வாய்ப்புகள் உள்ளன. ஏனெனில், அரசு வருவாயை அதிகம் இழக்கவும் முடியாது.பட்ஜெட்டின் சில நடவடிக்கைகள், சிகரெட் நிறுவனங்கள் உள்ளிட்டவற்றை அதிகம் பாதிக்கக் கூடும்.இவ்வாறு அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)