எதையும் சமாளிக்க தயார் எஸ்.பி.ஐ., அறிவிப்புஎதையும் சமாளிக்க தயார் எஸ்.பி.ஐ., அறிவிப்பு ...  நிதி ஆலோசகர்களுக்கு  ‘செபி’ கிடுக்கிப் பிடி நிதி ஆலோசகர்களுக்கு ‘செபி’ கிடுக்கிப் பிடி ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வட்டி குறைப்பின் பலன் விரைவில் தெரியும் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 பிப்
2020
23:38

புது­டில்லி:ரிசர்வ் வங்கி, வட்டி விகி­தத்தை கணி­ச­மாக குறைத்த போதும், அதற்­கேற்ப
வங்­கி­கள், அவை வழங்­கும் கட­னுக்­கான வட்­டியை அதி­கம் குறைக்­க­வில்லை. இந்­
நி­லை­யில், வட்டி விகி­தத்தை குறைத்­த­தன் பலன், வரும் நாட்­களில் தெரிய வரும் என, ரிசர்வ் வங்­கி­யின் கவர்­னர் சக்­தி­காந்த தாஸ் தெரி­வித்­துஉள்­ளார்.ரிசர்வ் வங்­கி­யின் நிர்­வா­கக் குழு கூட்­டத்­தில் பங்­கேற்ற பின், அவர் இவ்­வாறு கூறி­னார்.


கடன் வளர்ச்சி


இது குறித்து, அவர் மேலும் கூறி­ய­தா­வது:வங்­கி­க­ளுக்கு வழங்­கும் குறு­கிய காலக்
கட­னுக்­கான, ரெப்போ வட்டி விகி­தத்தை, ரிசர்வ் வங்கி குறைத்­த­தன் பலன், வரும் நாட்­களில் அதி­க­ரிக்­கும்; மேலும், வர­வி­ருக்­கும் மாதங்­களில், கடன் வளர்ச்­சி­யும் அதி­க­ரிக்­கும் என்று நாங்­கள் எதிர்­பார்க்­கி­றோம்.பொரு­ளா­தார நிலை­யில், வளர்ச்­சிக்­கான ஒரு சில குறி­யீ­டு­கள் தெரி­யத் துவங்கி உள்ளன. பொரு­ளா­தார நிலை மற்­றும் பண­வீக்­கம் கார­ண­மாக, ரிசர்வ் வங்­கி­யின் நிதிக் கொள்கை குழு கூட்­டம், வட்டி விகி­தத்­தில் எந்த மாற்­றத்­தை­யும் செய்­ய­வில்லை.


சில்­லரை விலை பண­வீக்­கம் மட்­டு­மின்றி, அடிப்­படை பண­வீக்­கத்­தை­யும் நிதிக் கொள்கை கட்­ட­மைப்­பில் சேர்ப்­பது குறித்து, நாங்­கள் உள்­ளுக்­குள் ஆலோ­சித்து வரு­கி­றோம்.மேலும், கடந்த மூன்­றரை ஆண்­டு­களில், நிதிக் கொள்கை குழு முடி­வு­க­ளுக்­கான கட்­ட­மைப்­பு­கள்
எவ்­வாறு செயல்­பட்­டுள்­ளது என்­ப­தை­யும் ஆராய்ந்து வரு­கி­றோம். தேவைப்­பட்­டால்,
அர­சு­டன் இது குறித்து தகுந்த நேரத்­தில் பேச்சு நடத்­து­வோம்.இவ்­வாறு, அவர் கூறி­னார்.


வட்டி விகிதம்


கடந்த, 6ம் தேதி­யன்று, ஆறு உறுப்­பி­னர்­கள் கொண்ட நிதிக் கொள்கை குழு கூட்­டத்­தின்
முடி­வில், வட்டி விகி­தத்­தில் எந்த மாற்­ற­மும் செய்­யப்­ப­ட­வில்லை என அறி­விக்­கப்­பட்­டது. ரெப்போ வட்டி விகி­தம், 5.15 சத­வீ­தம் என்ற நிலையே தொட­ரும் என­வும் தெரி­விக்­கப்­பட்­டது.
இதே போல், கடந்த டிசம்­பர் மாதத்­தில் நடை­பெற்ற நிதிக் கொள்கை குழு கூட்­டத்­தி­லும், வட்டி விகி­தத்­தில் எந்த மாற்­ற­மும் செய்­யப்­ப­ட­வில்லை.


டிசம்­ப­ருக்கு முன், தொடர்ந்து ஐந்து முறை, வட்டி விகி­தத்தை ரிசர்வ் வங்கி குறைத்து
அறி­வித்து வந்­தது குறிப்­பி­டத்­தக்­கது. வட்டி விகி­தம் ஐந்து முறை­யும் சேர்த்து, மொத்­தம்,
1.35 சத­வீ­தம் அள­வுக்கு குறைக்­கப்­பட்­டது. கடந்த இரண்டு கூட்­டங்­களில் தான் வட்டி விகி­தம் குறைக்­கப்­ப­ட­வில்லை.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
முதல் சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர், சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
business news
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
business news
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
business news
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
business news
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)