பதிவு செய்த நாள்
20 பிப்2020
07:08
புதுடில்லி: சிறப்பு பொருளாதார மண்டலங்கள் மூலமான ஏற்றுமதி, நடப்பு நிதியாண்டில் பிப்ரவரி, 17ம் தேதி நிலவரப்படி, 100 பில்லியன் டாலர் அதாவது, 7.10 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது. இது, கடந்த, 2018 – 19ம் நிதியாண்டை விட அதிகமாகும்.
நாட்டின் ஏற்றுமதி அதிகரிப்பதற்கு, சிறப்பு பொருளாதார மண்டலங்கள் தொடர்ந்து முதற்காரணமாக இருந்து வருவதாக, வர்த்தகத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.இது குறித்து, அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளதாவது: உலகப் பொருளாதாரத்தில், அதிகளவிலான ஏற்ற, இறக்கங்கள் இருந்தபோதிலும், சிறப்பு பொருளாதார மண்டலங்கள், 10 ஆயிரம் கோடி டாலர் மதிப்பிற்கு ஏற்றுமதி செய்துள்ளன.
கடந்த நிதியாண்டில், இதே, 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிற்கான ஏற்றுமதிக்கு, முழு ஆண்டும் தேவைப்பட்டது. ஆனால், தற்போது பிப்ரவரி பாதியிலேயே இலக்கை தாண்டிவிட்டது. சேவைகள் பிரிவில், தகவல் தொழில்நுட்ப துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் செயல்படும் துறை ஆகியவற்றின் பங்கு, 23.69 சதவீதமாக உள்ளது.தயாரிப்பு துறை ஏற்றுமதியில், 4 சதவீதம் அளவுக்கு வளர்ச்சிஎட்டப்பட்டுள்ளது. தற்போது, செயல்பாட்டில் இருக்கும் சிறப்பு பொருளாதார மண்டலங்களின் எண்ணிக்கை, 241. இதுவே கடந்த நிதியாண்டில், 235 ஆக இருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|