பதிவு செய்த நாள்
20 பிப்2020
07:09
புதுடில்லி : ‘முகேஷ் டிரெண்ட்ஸ் லைப்ஸ்டைல்’ நிறுவனம், பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கு, பங்குச் சந்தை கட்டுப்பாடு அமைப்பான, ‘செபி’ அனுமதி வழங்கி உள்ளது.
ஆமதாபாதைச் சேர்ந்த ஜவுளி உற்பத்தி நிறுவனமான, முகேஷ் டிரெண்ட்ஸ் லைப்ஸ்டைல், பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கு, செபி அனுமதி வழங்கி உள்ளது.கடந்த செப்டம்பர் மாதத்தில், இந்நிறுவனம் பங்கு வெளியீட்டுக்காக, செபியிடம் விண்ணப்பித்திருந்தது. இந்த பங்கு வெளியீட்டின் மூலம், இந்நிறுவனம், 90 கோடி ரூபாய் அளவுக்கு நிதி திரட்ட திட்டமிட்டு உள்ளதாக தெரிகிறது.
இதையடுத்து, பங்கு வெளியீட்டின்போது, 10 ரூபாய் முகமதிப்பு கொண்ட, ஒரு கோடி பங்குகளை வெளியிட இருக்கிறது.பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டப்படும் நிதியில், புதிய உற்பத்தி ஆலையை துவங்கவும், பொதுவான நிர்வாகச் செலவுகளுக்கு பயன்படுத்திக் கொள்ளவும், இந்நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.இந்நிறுவனம் முதன் முதலாக, 1990ல் உற்பத்தியை துவங்கியது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|