பதிவு செய்த நாள்
21 பிப்2020
02:43
புதுடில்லி : ‘எஸ்.பி.ஐ., கார்ட்ஸ் அண்டு பேமென்ட் சர்வீசஸ்’ நிறுவனத்தின், புதிய பங்கு வெளியீடு, மார்ச் 2ம் தேதி துவங்கி, 5ம் தேதி முடிவடைகிறது.
பாரத ஸ்டேட் வங்கியின் துணை நிறுவனமான, எஸ்.பி.ஐ., கார்ட்ஸ் நிறுவனம், பங்கு வெளியீட்டின் மூலம், 6,000 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனத்தின், 76 சதவீத பங்குகள், எஸ்.பி.ஐ., வங்கியின் வசம் உள்ளது. தனியார் பங்கு முதலீட்டு நிறுவனமான, கார்லைல் வசம், மீதம் உள்ள பங்குகள் உள்ளன.
பங்கு வெளியீட்டின்போது, 500 கோடி ரூபாய்க்கு புதிய பங்குகள் வெளியிடப்பட உள்ளன. மேலும், எஸ்.பி.ஐ., வங்கியிடம் உள்ள, 3.73 கோடி பங்குகளும், கார்லைல் வசம் இருக்கும், 9.32 கோடி பங்குகளுமாக மொத்தம், 10.05 கோடி பங்குகள் விற்பனை செய்யப்பட இருக்கின்றன. இந்த புதிய பங்கு வெளியீட்டின் போது, இந்நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை, 745 – 775 ரூபாயாக நிர்ணயிக்கப்படும் என தெரிகிறது.
கடந்த நவம்பர் மாத நிலவரப்படி, கடன் அட்டைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில், முதல் இடத்தில், எச்.டி.எப்.சி., வங்கியும், எஸ்.பி.ஐ., கார்ட்ஸ் இரண்டாவது இடத்திலும் உள்ளன. எச்.டி.எப்.சி., வங்கி, 27 சதவீத சந்தை பங்களிப்பும், எஸ்.பி.ஐ., கார்ட்ஸ், 18 சதவீத சந்தை பங்களிப்பும் கொண்டிருக்கின்றன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|