அரசு கவனம் செலுத்தணும்: சுனில் மிட்டல் அரசு கவனம் செலுத்தணும்: சுனில் மிட்டல் ...  அருங்காட்சியகம் மூலம்   எல்., அண்டு டி., வரலாறு அருங்காட்சியகம் மூலம் எல்., அண்டு டி., வரலாறு ...
‘எஸ்.பி.ஐ., கார்ட்ஸ்’ நிறுவனம் மார்ச் 2ல் பங்கு வெளியீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 பிப்
2020
02:43

புதுடில்லி : ‘எஸ்.பி.ஐ., கார்ட்ஸ் அண்டு பேமென்ட் சர்வீசஸ்’ நிறுவனத்தின், புதிய பங்கு வெளியீடு, மார்ச் 2ம் தேதி துவங்கி, 5ம் தேதி முடிவடைகிறது.

பாரத ஸ்டேட் வங்கியின் துணை நிறுவனமான, எஸ்.பி.ஐ., கார்ட்ஸ் நிறுவனம், பங்கு வெளியீட்டின் மூலம், 6,000 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனத்தின், 76 சதவீத பங்குகள், எஸ்.பி.ஐ., வங்கியின் வசம் உள்ளது. தனியார் பங்கு முதலீட்டு நிறுவனமான, கார்லைல் வசம், மீதம் உள்ள பங்குகள் உள்ளன.

பங்கு வெளியீட்டின்போது, 500 கோடி ரூபாய்க்கு புதிய பங்குகள் வெளியிடப்பட உள்ளன. மேலும், எஸ்.பி.ஐ., வங்கியிடம் உள்ள, 3.73 கோடி பங்குகளும், கார்லைல் வசம் இருக்கும், 9.32 கோடி பங்குகளுமாக மொத்தம், 10.05 கோடி பங்குகள் விற்பனை செய்யப்பட இருக்கின்றன. இந்த புதிய பங்கு வெளியீட்டின் போது, இந்நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை, 745 – 775 ரூபாயாக நிர்ணயிக்கப்படும் என தெரிகிறது.

கடந்த நவம்பர் மாத நிலவரப்படி, கடன் அட்டைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில், முதல் இடத்தில், எச்.டி.எப்.சி., வங்கியும், எஸ்.பி.ஐ., கார்ட்ஸ் இரண்டாவது இடத்திலும் உள்ளன. எச்.டி.எப்.சி., வங்கி, 27 சதவீத சந்தை பங்களிப்பும், எஸ்.பி.ஐ., கார்ட்ஸ், 18 சதவீத சந்தை பங்களிப்பும் கொண்டிருக்கின்றன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)